ஆப்நகரம்

பாதுகாப்பா இருக்க இதை செய்ங்க... எஸ்பிஐ அட்வைஸ்!

டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Apr 2022, 3:26 pm
இந்தியாவில் இப்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளையே மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பணம் அனுப்புவது, கட்டணம் செலுத்துவது, ஷாப்பிங் செய்வது என பல்வேறு விஷயங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையிலேயே எளிதாக முடிந்துவிடுகின்றன. இதனால் போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற மொபைல் ஆப்கள் நிறைய வந்துவிட்டன.
Samayam Tamil sbi


டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நிறைய வசதிகள் இருந்தாலும் அதில் ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆன்லைன் நிதி மோசடி போன்ற சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பாக இருக்கவும் வங்கிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மோசடிகள் குறைந்தபாடில்லை.

இந்த லிங்க்கை கிளிக் செய்து அட்டகாசமான பரிசு வெல்லுங்கள்

இந்நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களை மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை செய்துள்ளது. கீழ்க்காணும் இந்த 5 விஷயங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்துகொண்டு மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

1. PIN நம்பர் வித்தியாசமானதாக கண்டுபிடிக்க முடியாததாக இருக்க வேண்டும்.

2. UPI பரிவர்த்தனை செய்யும்படி தெரியாத இடத்திலிருந்து கோரிக்கை வந்தால் அதில் செல்லக் கூடாது.

3. இதுபோன்ற மோசடிகள் குறித்த சந்தேகம் இருந்தால் உடனடியாக வங்கிக்கு புகார் கொடுக்க வேண்டும்.

4. பணம் அனுப்புவதற்கு மட்டுமே PIN நம்பர் தேவை. பணத்தை பெறுவதற்கு நீங்கள் PIN நம்பர் பதிவிடத் தேவையில்லை.

5. உங்களுக்கு தெரியாமல் பரிவர்த்தனை நடைபெற்றது தெரியவந்தால் உடனடியாக உங்களுடைய UPI கணக்கை டீ-ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்