ஆப்நகரம்

பாஸ்வர்டு இப்படி இருந்தால் நல்லது... எஸ்பிஐ எச்சரிக்கை!

வங்கிக் கணக்குக்கான பாஸ்வர்டு விஷயத்தில் வாடிக்கையாளர்கள் இந்த விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எச்சரித்துள்ளது.

Samayam Tamil 22 Aug 2021, 5:54 pm
வங்கி மோசடி என்பது நீண்ட காலமாகவே இந்தியாவில் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. ஏடிஎம் பாஸ்வர்டு, நெட் பேங்கிங் ஐடி, போன்ற விவரங்களைத் திருடி லட்சக்கணக்கில் பணம் திருடப்படுகிறது. வங்கித் துறையில் தொழில்நுட்ப அம்சங்கள் எந்த அளவுக்குப் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் அதே அளவுக்கு ஓட்டைகளும் ஏற்படத்தான் செய்கின்றன.
Samayam Tamil sbi


PF சந்தாதார்களுக்கு ஹேப்பி நியூஸ்: 2022 வரை அரசே பணம் கொடுக்கும்!!
தொழில்நுட்ப வசதிகளையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மோசடி செய்வது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற சூழலில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை இந்த விஷயத்தில் எச்சரிக்கை செய்துள்ளது. குறிப்பாக, நெட் பேங்கிங் பாஸ்வர்டை மிகவும் பாதுகாப்பானதாக, யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வைத்திருக்க எச்சரிக்கை செய்துள்ளது. அதற்கு சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.

>> அப்பர் கேஸ் மற்றும் லோயர் கேஸ் சேர்த்து பாஸ்வர்டு வைக்கவும். உதாரணம்: ajsE7uGB

>> பாஸ்வர்டில் நம்பர், ஆல்பபெட், சிம்பள் எல்லாம் கலந்து இருக்க வேண்டும்.

>> குறைந்தது 8 இலக்கங்களில் பாஸ்வர்டு இருந்தால் நல்லது.

>> பொதுவான பாஸ்வர்டுகளை வைக்க வேண்டாம்.

>> ஒரே சீரீஸில் பாஸ்வர்டு வைக்கக் கூடாது. உதாரணம்: DOORBELL, DOOR8377

>>12345678 அல்லது abcdefgh போன்ற பாஸ்வர்டுகளை வைக்க வேண்டாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்