ஆப்நகரம்

மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடன்.. அரசு வங்கி அறிவிப்பு!

சிறப்புச் சலுகையின் கீழ் மாணவர்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கல்விக் கடன் வழங்குகிறது.

Samayam Tamil 24 May 2022, 3:35 pm
கல்விதான் மிகச் சிறந்த செல்வம் என்று கூறுவார்கள். ஆனால் இந்தியாவில் நிறையப் பேர் கல்வி கற்க முடியாமல் இளம் வயதிலேயே கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலையில் நிறையப் பேர் உள்ளனர். படிக்கும் ஆர்வமும் திறமையும் இருந்தும் போதிய வசதி இல்லாமல் படிப்பைத் தொடர முடியாமல் நிறையப் பேர் இருக்கின்றனர். இன்னும் சிலரோ பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்வு கல்வி கற்க பண ம் இல்லாமல் தவிக்கின்றனர். வெளிநாடு சென்று உயர்கல்வி பயில விரும்புபவர்களும் அதிகம்.
Samayam Tamil education loan


உயர் கல்வி கற்பதற்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. குறிப்பாக, இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மாணவர்களுக்கு சிறப்பு கல்விக் கடன் வழங்குகிறது. இதைப் பயன்படுத்தி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர் கல்வி கற்கலாம். பல்வேறு உயர் படிப்புகளுக்கு இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்குகிறது.

குறைந்த வட்டியில் இந்தக் கடனை மாணவர்கள் வாங்கலாம். அதுவும் மாணவிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. ரூ.7.5 லட்சம் வரையிலான கடனுக்கு கொலேட்ரல் தேவையில்லை. அதேபோல. ரூ.20 லட்சம் வரையிலான கடனுக்கு செயல்பாட்டுக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. படிப்பை முடித்த ஒரு ஆண்டுக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் தொடங்கும். அடுத்த 15 ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்படும்.

உள்நாட்டில் படிப்பதற்கு ரூ.50 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.1.50 கோடி வரையிலும் மாணவர்கள் கடன் வாங்கலாம். வட்டி விகிதம் 8.5 சதவீதம் மட்டுமே. இதில் மாணவிகளுக்கு 0.50 சதவீத சலுகை வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்