சென்ற டிசம்பர் காலாண்டின் முடிவில், எஸ்பிஐ வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம், 134 சதவீதம் உயர்வுடன், ரூ.2610 கோடியாக உள்ளது.
கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் முதல்முறையாக, எஸ்பிஐ வங்கியின் லாபம் தற்போது அதிகரித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடந்த சில ஆண்டுகளாக, வாராக்கடன் சுமையில் சிக்கியுள்ளது.
தற்போது அதனை சீர்படுத்தி, மெல்ல மெல்ல வர்த்தகப் பணிகளை லாபத்திற்குக் கொண்டுவர தொடங்கியுள்ளதாகவும், இதுவே டிசம்பர் காலாண்டில் லாபம் அதிகரிக்க முக்கிய காரணம் எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2015-16ம் நிதியாண்டின் டிசம்பர் காலத்தோடு ஒப்பிடுகையில், தற்போதைய டிசம்பர் காலாண்டு லாபம் 134% உயர்வு எனவும் கூறப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், பண மதிப்பு நீக்கம் காரணமாக, நாடு முழுவதும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எஸ்பிஐ வங்கிக் கிளைகளிலேயே பொதுமக்கள் அதிகளவில் டெபாசிட் செய்தனர். இதனால், வங்கியின் பணப்புழக்கம், வரவு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
State Bank of India Q3 net profit jumps to Rs 2610 cr, beats estimates.
கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் முதல்முறையாக, எஸ்பிஐ வங்கியின் லாபம் தற்போது அதிகரித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, கடந்த சில ஆண்டுகளாக, வாராக்கடன் சுமையில் சிக்கியுள்ளது.
தற்போது அதனை சீர்படுத்தி, மெல்ல மெல்ல வர்த்தகப் பணிகளை லாபத்திற்குக் கொண்டுவர தொடங்கியுள்ளதாகவும், இதுவே டிசம்பர் காலாண்டில் லாபம் அதிகரிக்க முக்கிய காரணம் எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2015-16ம் நிதியாண்டின் டிசம்பர் காலத்தோடு ஒப்பிடுகையில், தற்போதைய டிசம்பர் காலாண்டு லாபம் 134% உயர்வு எனவும் கூறப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், பண மதிப்பு நீக்கம் காரணமாக, நாடு முழுவதும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எஸ்பிஐ வங்கிக் கிளைகளிலேயே பொதுமக்கள் அதிகளவில் டெபாசிட் செய்தனர். இதனால், வங்கியின் பணப்புழக்கம், வரவு உயர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
State Bank of India Q3 net profit jumps to Rs 2610 cr, beats estimates.