ஆப்நகரம்

PF பணம் - இதை அப்டேட் செய்யாவிட்டால் கிடைக்காது!

ஆன்லைன் மூலமாக மிக எளிதாக இணைக்கலாம்.

Samayam Tamil 5 Jan 2022, 4:40 pm
நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் சிறு தொகை பிடிக்கப்பட்டு, நிறுவனம் தரப்பிலிருந்தும் பங்களிப்பு வழங்கப்பட்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) என்ற பெயரில் பெரிய தொகை சேமித்து வைக்கப்படுகிறது. இந்தப் பணத்தை எடுப்பதற்கு வங்கிக் கணக்கு அவசியம்.
Samayam Tamil PF Account


பிஎஃப் பணத்தை கிளைம் செய்தால் அது நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். எனவே பிஎஃப் உறுப்பினர்கள் அனைவரும் வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் இணைப்பது அவசியம்.

பிஎஃப் கணக்கில் இணைக்கப்படும் வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும். அந்தக் கணக்கு முடங்கிவிட்டால் உடனடியாக வேறொரு வங்கிக் கணக்கை பிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் பணம் கிடைக்கும். பிஎஃப் கணக்கில் வங்கிக் கணக்கை இணைப்பதும் புதிய கணக்கை இணைப்பதும் சுலபமான ஒன்றுதான். ஆன்லைன் மூலமாகவே மிக எளிதாக இணைத்துவிடலாம்.

பிஎஃப் வெப்சைட்டில் முதலில் லாகின் செய்ய வேண்டும்.

https://www.epfindia.gov.in/site_en/index.php

டாப் மெனுவில் 'manage' என்ற வசதியை கிளிக் செய்யவும். அதில் 'KYC'ஆப்சனை தேர்ந்தெடுத்து document type என்பதில் ‘bank' என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது புதிய வங்கிக் கணக்கு, அதன் IFSC code போன்றவற்றைப் பதிவிடவும்.

வங்கிக் கணக்கு விவரங்களைப் பதிவிட்டவுடன் 'save' கொடுக்க வேண்டும்.

வங்கிக் கணக்குக்கான விவரங்களை நிறுவனத்தின் சரிபார்ப்புக்கு வழங்க வேண்டும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்களாக இருந்தால் வங்கி தரப்பிலிருந்தே சரிபார்ப்பு செய்யப்படும்.

நிறுவனம் தரப்பிலிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் வங்கிக் கணக்கு விவரங்கள் பிஎஃப் கணக்கில் அப்டேட் ஆகிவிடும்.

இதற்கான உறுதிப்படுத்தும் தகவல் எஸ்.எம்.எஸ். மூலமாக அனுப்பப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்