ஆப்நகரம்

ஆதார் கார்டு இருக்கா? அப்போ உடனே இந்த வேலைய முடிங்க!

பேப்பர் இல்லாமல் ஆதார் KYC முடிப்பது ஈசியான வேலைதான். அது எப்படி என்று இங்கே பாருங்கள்.

Samayam Tamil 12 Aug 2022, 11:07 am
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணமாகும். இது வெறும் அடையாள ஆவணம் மட்டுமல்ல; அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கும் வங்கி, பணம் சார்ந்த விஷயங்களுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டை வைத்து கடன் கூட வாங்க முடியும். இப்படிப்பட்ட ஆதார் கார்டை மிகவும் பாதுகாப்பாகவும் அப்டேட்டாகவும் வைத்திருப்பது அவசியம்.
Samayam Tamil aadhaar


அதேபோல, ஆதார் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதற்கான கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது கட்டாயமாகும். கேஒய்சி என்பது வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் நடைமுறை. பொதுவாக, வங்கிகளில் கேஒய்சி சரிபார்ப்பு இருக்கும். இப்போது ஆதார் கேஒய்சி சரிபார்ப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒருவர் வைத்திருக்கும் ஆதார் கார்டு அவருடையது தானா என்பதை உறுதி செய்வது கேஒய்சி நடைமுறையாகும்.

கேஒய்சி சரிபார்ப்பு முன்பெல்லாம் சிரமமாக இருந்தது. நிறைய அடையாள ஆவணங்களை நேரடியாகச் சென்று வழங்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக இந்த வேலையை முடிக்கலாம்.

ரூ.1000 டூ ரூ.5 லட்சம்.. 3 வருடத்தில் 30% லாபம் தரும் சேமிப்புத் திட்டங்கள்!!
  • முதலில், UIDAI என்ற ஆதார் அமைப்பின் Uidai.gov.in/offlineaadhaar பக்கத்திற்குச் செல்லவும்.

  • இதற்குப் பிறகு, கொடுக்கப்பட்ட இடத்தில் உங்கள் ‘ஆதார் எண் / விஐடி’ மற்றும் பாதுகாப்பு குறியீட்டை உள்ளிட வேண்டும்.

  • அடுத்து உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP நம்பர் அனுப்பப்படும். அதைப் பதிவு செய்யவும்.

  • இதன் பிறகு ஆதார் கார்டு சரிபார்ப்பு முடிந்துவிடும்.

  • ஆதார் கார்டை டவுன்லோடு செய்ய Download பட்டனை கிளிக் செய்தால் அதற்குரிய ZIP ஃபைல் உங்கள் மொபைல் போன்/கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகிவிடும்.

  • இந்த ஆவணத்தை நீங்கள் அதிகாரப்பூர்வ ஆவணமாக டிஜிட்டல் முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்