நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியைக் குறைத்தது வரலாற்றுச் சிறப்புடைய முடிவு என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியையும் 25.17 சதவீதமாகக் குறைத்து அறிவித்துள்ளார். இதுபோல அக்டோபர் 1 முதல் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு 17.1 சதவீதம் வரியை நிர்ணயிப்பதாக அறிவித்தார்.
இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் அபார முன்னேற்றம் அடைந்துள்ளன. இரு நாட்களாக சரிவு கண்ட சந்தைகள் ஒரே நாளில் தலைகீழாக மாறிவிட்டன.
அக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை!
இதைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, " கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்றுச் சிறப்புடையது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு இது சிறந்த ஊக்கம் அளிக்கும். உலகம் முழுவதிலும் இருந்து தனியார் முதலீடுகளைக் கவரும். தனியார் நிறுவனங்களிடையே போட்டியை அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும். முடிவாக 130 கோடி இந்தியர்களுக்கும் பரஸ்பர நன்மை விளையும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் வட்டி உங்களுக்கு கிடைச்சுருச்சா? பிஎப் கணக்கைப் பாருங்க...
கடந்த சில வாரங்களில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் அனைத்தும் அரசு வர்த்தகத்தை மேம்படுத்தவற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது எனவும் 5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கி நகர்ந்துகிறது எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், பின்னடைவை ஏற்படுத்திய முக்கிய காரணங்களில் ஒன்றாக கார்ப்பரேட் வரி இருந்தது. இப்போது அது குறைத்துள்ளது. இது பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு நெருக்கமாக நம்மை முன்னேற்றும் என தெரிவித்திருக்கிறார்.
கார்ப்பரேட் வரி குறைப்பு மற்றும் பிற சலுகைகளை அறிவித்திருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் குறையும் என்று நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பின்போது கூறினார்.
முக்கியமான பிரச்சினையை தீர்த்துவிட்டார் நிர்மலா சீதாராமன்: ஆர்பிஐ ஆளுநர்
இதன் எதிரொலியாக பங்குச்சந்தைகள் அபார முன்னேற்றம் அடைந்துள்ளன. இரு நாட்களாக சரிவு கண்ட சந்தைகள் ஒரே நாளில் தலைகீழாக மாறிவிட்டன.
அக்டோபர் 1 முதல் புதிய தொழில் தொடங்கினால் வரிச்சலுகை!
இதைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, " கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் நடவடிக்கை வரலாற்றுச் சிறப்புடையது. மேக் இன் இந்தியா திட்டத்துக்கு இது சிறந்த ஊக்கம் அளிக்கும். உலகம் முழுவதிலும் இருந்து தனியார் முதலீடுகளைக் கவரும். தனியார் நிறுவனங்களிடையே போட்டியை அதிகரிக்கும். வேலை வாய்ப்புகளை உருவாக்கும். முடிவாக 130 கோடி இந்தியர்களுக்கும் பரஸ்பர நன்மை விளையும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் வட்டி உங்களுக்கு கிடைச்சுருச்சா? பிஎப் கணக்கைப் பாருங்க...
கடந்த சில வாரங்களில் வெளியாகியுள்ள அறிவிப்புகள் அனைத்தும் அரசு வர்த்தகத்தை மேம்படுத்தவற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என்பதைக் காட்டுகிறது எனவும் 5 ட்ரில்லியன் பொருளாதார இலக்கை நோக்கி நகர்ந்துகிறது எனவும் கூறியுள்ளார்.
இதனிடையே, ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ், பின்னடைவை ஏற்படுத்திய முக்கிய காரணங்களில் ஒன்றாக கார்ப்பரேட் வரி இருந்தது. இப்போது அது குறைத்துள்ளது. இது பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு நெருக்கமாக நம்மை முன்னேற்றும் என தெரிவித்திருக்கிறார்.
கார்ப்பரேட் வரி குறைப்பு மற்றும் பிற சலுகைகளை அறிவித்திருப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வருவாய் குறையும் என்று நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பின்போது கூறினார்.
முக்கியமான பிரச்சினையை தீர்த்துவிட்டார் நிர்மலா சீதாராமன்: ஆர்பிஐ ஆளுநர்