ஆப்நகரம்

பங்குச் சந்தை நிலவரம்: ஐஆர்சிடிசி, விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு மவுசு!

பங்குச் சந்தையில் ஐஆர்சிடிசி நிறுவனம் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சி கண்டுள்ளன.

Samayam Tamil 21 May 2020, 1:17 pm
பங்குச் சந்தையில் இன்று காலை விற்பனை தொடங்கியது முதல் சென்செக்ஸ் குறியீடு 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. முக்கியமாக, ஹெச்டிஎஃப்சி ட்வின்ஸ், கொடாக் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.
Samayam Tamil Sensex today


மும்பை பங்குச் சந்தையை பொறுத்தவரையில், சென்செக்ஸ் குறியீடு 157.82 புள்ளிகள் உயர்ந்து 30,989.03ஆக அதிகரித்துள்ளது. இது 0.51 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில் நிஃப்டி குறியீடு 38.45 புள்ளிகள் உயர்ந்து 9,105ஆக அதிகரித்துள்ளது. இது 0.42 விழுக்காடு உயர்வாகும்.

சென்செக்ஸை பொறுத்தவரை, அதிகபட்சமாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 6 விழுக்காடு உயர்வை எட்டியுளது. அதற்கு அடுத்தபடியாக ஹீரோ மோட்டோகார்ப், கொடாக் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வளர்ச்சி கண்டுள்ளன. மறுபுறம், என்டிபிசி, ஓஎன்ஜிசி, ஐடிசி, டெக் மகிந்த்ரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.

மே 25ஆம் தேதி முதல் படிப்படியாக விமானப் போக்குவரத்து தொடங்கும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று விமானப் போக்குவரத்து நிறுவனங்களின் பங்குகள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. மேலும், ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளதால் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகள் 5 விழுக்காடு உயர்வை கண்டுள்ளன.

சர்வதேச பங்குச் சந்தைகளை பொறுத்தவரையில், ஷாங்காய், சியோல் பங்குச் சந்தைகள் நேர்மறையாக வர்த்தகம் செய்துள்ளன. மறுபுறம், டோக்யோ, ஹாங் காங் பங்குச் சந்தைகள் எதிர்மறையாக வர்த்தகம் செய்துள்ளன. வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தைகள் நேற்றிரவு வலுவான வளர்ச்சியுடன் நிறைவடைந்தன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்