ஆப்நகரம்

பங்குச் சந்தை நிலவரம்...சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வை எட்டியுள்ளது.

Samayam Tamil 28 May 2020, 12:47 pm
மும்பை பங்குச் சந்தையில் இன்று விற்பனை தொடங்கியபிறகு காலை 11.45 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 555.99 புள்ளிகள் அதிகரித்து 32161.21ஆக உயர்ந்தது. இது 1.76 விழுக்காடு உயர்வாகும். தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரையில் நிஃப்டி குறியீடு 160.10 புள்ளிகள் அதிகரித்து 9475.05ஆக உயர்ந்தது. இது 1.72 விழுக்காடு உயர்வாகும்.
Samayam Tamil சென்செக்ஸ்


சென்செக்ஸை பொறுத்தவரையில் அதிகபட்சமாக இண்டஸ் இண்ட் பேங்க் 7 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி பேங்க், எல்&டி, ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்கள் முறையே 5.46%, 4.80%, 4.44%, 4.15% வளர்ச்சியை எட்டியுள்ளன.
சென்செக்ஸில் அதிகபட்சமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் 1.08 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக் ஆகிய பங்குகளும் சரிந்துள்ளன.

நிஃப்டியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஜீ எண்டர்டெய்ன் பங்குகள் 6.96 விழுக்காடு உயர்வை கண்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இண்டஸ் இண்ட் பேங்க், எய்ச்சர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய பங்குகள் முறையே 6.83%, 6.69%, 5.46%, 4.82% வளர்ச்சியை எட்டியுள்ளன.

நிஃப்டியில் அதிகபட்சமாக விப்ரோ நிறுவனம் 1.99 விழுக்காடு சரிவை சந்தித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிபிசிஎல், இன்ஃபோசிஸ், பார்தி ஏர்டெ, டிசிஎஸ் பங்குகள் சறுக்கியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்