ஆப்நகரம்

Share Market: ராக்கெட் வேகத்தில் சென்செக்ஸ்... டாப் பங்குகள் இவைதான்!

இன்று பங்கு வர்த்தகத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 11 Aug 2020, 9:59 am
இன்று பங்கு வர்த்தகம் தொடங்கிய பின்னர் சென்செக்ஸ் 312.51 புள்ளிகள் உயர்ந்து 38,494.59ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை நிஃப்டி 98.55 புள்ளிகள் உயர்ந்து 11,368.70ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ பேங்க் பங்கு விலை 2.79% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக ஆக்சிஸ் பேங்க் 2.03%, டாடா ஸ்டீல் 1.85%, பவர் கிரிட் கார்ப் 1.64%, எல்&டி 1.59%, ஐடிசி 1.43%, டெக் மகிந்த்ரா 1.25%, ஹெச்சிஎல் டெக் 1.19% உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக டைடன் பங்கு விலை 2.80% சரிந்துள்ளது. மற்ற பங்குகளுக்கு பெரிதாக பாதிப்பில்லை.

நிஃப்டியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஹிண்டால்கோ பங்கு விலை 3.19% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் 2.24%, ஐசிஐசிஐ பேங்க் 1.99%, ஜீ எண்டர்டெய்ன்மெண்ட் 1.65%, பவர் கிரிட் 1.58%, ஆக்சிஸ் பேங்க் 1.58%, எல்&டி 1.53%, ஐடிசி 1.36% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக ஸ்ரீ சிமெண்ட் பங்கு விலை 3.89% சரிந்துள்ளது. அடுத்தபடியாக டைடன் 3.68%, யூபிஎல் 0.51%, சிப்லா 0.45%, பார்தி ஏர்டெல் 0.21%, பார்தி இன்ஃப்ராடெல் 0.15% சரிந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.12 சரிந்து ரூ.74.96ஆக குறைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்