ஆப்நகரம்

Stock Market: அடித்து நொறுக்கும் சென்செக்ஸ் - இன்று டாப் பங்குகள் என்ன?

இன்று பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.

Samayam Tamil 23 Sep 2020, 10:44 am

இன்று பங்கு வர்த்தகத்தில் காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 267.93 புள்ளிகள் உயர்ந்து 38,002.01ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை நிப்டி 68.60 புள்ளிகள் உயர்ந்து 11,222.25ஐ தொட்டுள்ளது.
Samayam Tamil பங்குச் சந்தை


சென்செக்ஸில் அதிகபட்சமாக ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலை 2.03% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் 1.83%, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.71%, ஐடிசி 1.61%, இந்துஸ்தான் யூனிலீவர் 1.37%, டைடன் 1.19% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக ஏர்டெல் பங்கு விலை 4.93% சரிந்துள்ளது. அடுத்தபடியாக டாடா ஸ்டீல் 2.71%, இண்டஸ் இண்ட் பேங்க் 2.09%, டிசிஎஸ் 2%, எண்டிபிசி 1.71%, பவர் கிரிட் 1.66%, ஓஎன்ஜிசி 1.15% சரிந்துள்ளன.

வேலை போயிருச்சா... உக்காந்துக்கிட்டே சம்பளம் வாங்கலாம்!

நிப்டியில் அதிகபட்சமாக ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கு விலை 2.04% உயர்ந்துள்ளது. அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் 1.72%, ஐடிசி 1.69%, விப்ரோ 1.55%, இந்துஸ்தான் யூனிலீவர் 1.48%, பிரிட்டானியா 1.44%, டாக்டர் ரெட்டி 1.43% உயர்ந்துள்ளன.

அதிகபட்சமாக ஏர்டெல் பங்கு விலை 4.47% சரிந்துள்ளது. அடுத்தபடியாக டாடா ஸ்டீல் 2.69%, இண்டஸ் இண்ட் பேங்க் 2.08%, டிசிஎஸ் 2.06%, கிரசிம் 1.80%, பவர் கிரிட் 1.72% எண்டிபிசி 1.60% சரிந்துள்ளன.

சர்வதேச பங்குச் சந்தைகள் வீழ்ச்சியின் எதிரொலியாக நேற்று முன் தினம் இந்திய பங்குச் சந்தைகளும் கடுமையாக சரிந்தன. இந்நிலையில், இந்திய சந்தைகள் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா உயர்ந்து ரூ.73.56ஆக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்