ஆப்நகரம்

பங்குச்சந்தைகளில் நீடிக்கும் உயர்வு

வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன.

TNN 12 Aug 2016, 4:13 pm
வார இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்துள்ளன.
Samayam Tamil stock markets extend gains
பங்குச்சந்தைகளில் நீடிக்கும் உயர்வு


சர்வதேச பங்குச்சந்தைகளில் வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது. உள்நாட்டில், ஜிஎஸ்டி மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. விரைவில் அதனை நடைமுறைப்படுத்தும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, சில்லறை முதலீட்டாளர்களும் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியதால், சந்தைகள் தொடர்ந்து உயர்வுடன் நீடிக்கின்றன.

அத்துடன், முன்னணி நிறுவனங்களில் ஜூன் காலாண்டு நிதிநிலை முடிவுகள் வெளியாகிவருகின்றன. இதில், பெரும்பாலான நிறுவனங்களின் செயல்பாடு முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி உள்ளதால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற பங்கு வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது.

வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் 322 புள்ளிகள் வரையும், நிஃப்டி புள்ளிகள் 83 புள்ளிகள் வரையும் உயர்ந்திருந்தன. ஹெச்டிஎப்சி, ஐடிசி, எஸ்பிஐ, கிராசிம் இன்டஸ்ட்ரீஸ், ஆதித்யா பிர்லா போன்ற முன்னணி நிறுவனப் பங்குகள் மட்டுமின்றி, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனப் பங்குகளும் கணிசமான விலை உயர்வை சந்தித்தன.

வர்த்தக முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 293 புள்ளிகள் உயர்வுடன் 28,152 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 8,672 புள்ளிகளாக முடிந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்