ஆப்நகரம்

ஆசியச் சந்தை வீழ்ச்சியிலும் எழுச்சி கண்ட இந்தியப் பங்குச்சந்தை; மெல்ல உயரும் சென்செக்ஸ்!

இன்றைய பங்குச்சந்தை தொடக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை எழுச்சியுடன் காணப்பட்டன.

Samayam Tamil 27 May 2019, 10:41 am
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை 1.61% மற்றும் 1.6% அளவிற்கு உயர்வுடன் நிறைவு பெற்றன. வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று, இந்தியப் பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியது.
Samayam Tamil Sensex Today


இன்று காலை 9.37 மணிக்கு, சென்செக்ஸ் 79.54 புள்ளிகள் அல்லது 0.20% அதிகரித்து, 39,514.26 புள்ளிகளிலும், நிஃப்டி 12.35 புள்ளிகள் அல்லது 0.10% உயர்ந்து, 11,856.45 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.

50 ஸ்கிரிப் இண்டக்ஸில் என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், யெஸ் வங்கி, பாரதி இன்ஃபிராடெல், இண்டியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் ஆகியவை 1.33% மற்றும் 2.03% இடையில் அதிக லாபத்தை ஈட்டியுள்ளன.

சென்செக்ஸ் உயர்வில் ஹெச்.டி.எப்.சி வங்கி, என்.டி.பி.சி மற்றும் ஐடிசி ஆகிய பெரும்பங்கு வகித்துள்ளன. நிஃப்டி வங்கி இண்டக்ஸ் 0.67% அளவிற்கு உயர்ந்தது. இன்றைய பங்குச்சந்தையில் என்.எஸ்.இயில் 1,152 பங்குகள் நேர்மறையாகவும், 511 பங்குகள் எதிர்மறையாகவும் வர்த்தகமாகி வருகின்றன.

இதேபோல் பி.எஸ்.இயில் 1,267 பங்குகள் முன்னேற்றத்துடனும், 467 பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி கொண்டிருக்கின்றன. இன்று காலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.35 என்ற அளவில் இருந்தது.

ஆசியப் பங்குச்சந்தை கடந்த 4 மாதங்ன்களில் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது. இதற்கு அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்