ஆப்நகரம்

வெளிநாட்டில் அமையும் முதல் இந்திய விமான நிலையம்

இலங்கையில் விமான நிலையம் ஒன்றை அமைக்க இந்திய விமான நிலைங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

TOI Tech 17 Sep 2018, 10:42 pm
இலங்கையில் விமான நிலையம் ஒன்றை அமைக்க இந்திய விமான நிலைங்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Samayam Tamil 65846200


பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைங்கள் ஆணையம் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களை அமைத்து மேலாண்மை செய்து வருகிறது. இந்தியாவில் 60 விமான நிலையங்களை அமைத்துள்ள இந்நிறுவனம் வெளிநாடுகளில் விமான நிலையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இதன் முதல்கட்டமாக இலங்கையில் யாழ்பாணத்தில் உள்ள பலாலி என்னும் இடத்தில் விமான நிலையத்தை அமைக்க திட்ட வரைவு ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனை இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்திருக்கிறது.

பல நாடுகளில் சொந்த விமான நிலையங்களை அமைப்பது வர்த்தக எல்லையை விரிவு செய்ய உதவும் என இந்திய விமான நிலைங்கள் ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்