ஆப்நகரம்

பென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... அக்டோபர் 1 முதல் இது ஈசி!

ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Oct 2021, 5:06 pm
அரசிடம் பென்சன் வாங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது இருப்பு ஆதாரத்தை பென்சன் அமைப்பிடம் தெரிவிப்பது அவசியமாகும். அவர்கள் ஆயுள் சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் பென்சன் தொகை தடையில்லாமல் கிடைக்கும். ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கு தபால் நிலையங்களுக்கும் மற்ற அரசு அலுவலகங்களுக்கும் நடையாய் நடக்க வேண்டிய சிரமம் இருந்தது. அதை எளிமைப்படுத்திய மத்திய மோடி அரசு டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழைப் பெறும் வசதியைக் கொண்டுவந்துள்ளது.
Samayam Tamil pension


வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பென்சனர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். இதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. வீட்டிலேயே அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே இச்சேவையைப் பெறலாம். முதலில் https://jeevanpramaan.gov.in/ என்ற வெப்சைட்டில் உள்நுழைந்து பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் மொபைல் நம்பர் மூலமாக புரூஃப் ஐடி பெறவேண்டும். இப்போது அந்த வெப்சைட்டிலேயே ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யலாம்.

ரூ. 6600 பென்சன்.. பாதுகாப்பான போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
ஆயுள் சான்றிதழ் பெறுவதற்கு ஆதார் முக்கியம். ஆதாருடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல, பென்சன் வழங்கும் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆதாரில் பிரச்சினை இருந்தால் பென்சன் கிடைப்பதிலும் பிரச்சினை ஏற்படலாம். டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உருவாக்கப்பட்ட பிறகு அது தனிப்பட்ட ஒரு ஐடியாக மாற்றப்படும். பென்சனர் உயிரோடு இருந்தால் அவரது ஆயுள் சான்றிதழ் அது தானாகவே சம்பந்தப்பட்ட வங்கிக்கோ அல்லது தபால் நிலையத்துக்கோ அனுப்பப்பட்டுவிடும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்