ஆப்நகரம்

பெண் குழந்தை இருக்கா? கவலை வேண்டாம்! இதோ சூப்பர் திட்டம்!

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் எப்படி இணைவது? அதன் பயன்கள் என்ன? முழு விவரம் இதோ...

Samayam Tamil 28 Nov 2021, 6:13 pm
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக 'சுகன்யா சம்ரிதி யோஜனா' எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். குழந்தையின் பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் நிலையம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கு தொடங்கலாம்.
Samayam Tamil ssy


செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில்தான் அதிக வட்டி கிடைக்கிறது. 21 வயதில் கணக்கை முடிக்கும் போது மூன்று மடங்கு தொகை கிடைப்பதால் பொதுமக்களிடையே இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. பெண்ணுக்கு 24 வயது ஆகும் போதோ அல்லது திருமணத்தின் போதோ கணக்கிலுள்ள மொத்தத் தொகையை எடுத்துவிட்டு கணக்கை மூடி விடலாம்.

இந்தத் திட்டத்தில் பெண் குழந்தைகளைச் சேர்க்க வயதுச் சான்றாக பிறப்புச் சான்றிதழைக் கொடுக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாதபட்சத்தில், ஆதார் கார்டு தேவைப்படும். பெற்றோரின் ஆதார் கார்டும் அவசியம். இந்தத் திட்டத்தை தொடங்க அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம். செல்வ மகள் திட்டத்தின் படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் புகைப்படத்தைச் சேர்த்து வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். உடனடியாக சேமிப்புக் கணக்கு திறக்கப்பட்டுவிடும்.

பென்சன் வாங்குவோருக்கு எச்சரிக்கை.. இன்னும் 2 நாள் டைம்!
செல்வ மகள் சேமிப்புக் கணக்கு திறக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதுமானது. வருடந்தோறும் குறைந்தபட்சம் 1000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை செலுத்தலாம். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் டெபாசிட் செய்ய முடியும். தொடர்ச்சியாக டெபாசிட் செய்யாமல் இடைவெளி விட்டால் கணக்கு மூடப்பட்டுவிடும். பிறகு டெபாசிட் தொகையுடன் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்தினால்தான் கணக்கை புதுப்பிக்க முடியும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்