ஆப்நகரம்

வீடு வாங்க சூப்பர் சான்ஸ்... இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது!

4 சதவீத வட்டியில் கடன்!

Samayam Tamil 21 Oct 2020, 10:34 am
புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு டாடா ஹவுசிங் நிறுவனத்தின் வீட்டுக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த வட்டியில் பல்வேறு சலுகைகளோடு வந்துள்ள இத்திட்டம் குறித்து இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil super change for home buyers tata housing scheme with low interest rate know full details
வீடு வாங்க சூப்பர் சான்ஸ்... இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது!


சொந்தமாக ஒரு வீடு!

எல்லாருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். பெரும்பாலோருக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும். தற்போதைய கொரோனா போன்ற நெருக்கடியான சமயத்தில் நமக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லையே என்ற கவலை பலருக்கு இருந்திருக்கும். வீடு வாங்குவதற்கு நிறைய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். நல்ல ஆலோசனையும் தேவை. எந்த வங்கியில் வீட்டுக் கடன் வாங்கலாம்? எவ்வளவு வட்டியில் கிடைக்கிறது? வேறு ஏதேனும் சலுகை உள்ளதா போன்ற பல்வேறு விஷயங்களை ஆலோசிக்க வேண்டும்.

செம சூப்பரான திட்டம்!

ரத்தன் டாடாவின் வீட்டு வசதி நிறுவனம் சார்பாக வீடு வாங்க விரும்பும் மக்களுக்கு ஒரு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா ஹவுசிங் நிறுவனம் 3.99 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை அறிவித்துள்ளது. இப்போதே பெரும்பாலான வங்கிகள் குறைந்தது 7 சதவீத வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கும் நிலையில், டாடா ஹவுசிங் நிறுவனத்தின் இச்சலுகை வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இது மட்டுமல்லாமல், பிளாட்டை முன்பதிவு செய்தபின் சொத்துக்களைப் பொறுத்து ரூ.25,000 முதல் ரூ.8 லட்சம் வரை பரிசு கூப்பன்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. வீட்டுக் கடனில் 10 சதவீதத்தைச் செலுத்தி சொத்துப் பதிவு செய்த பிறகு இந்த பரிசு கூப்பன் வழங்கப்படும். டாடா ஹவுசிங் நிறுவனத்தின் இத்திட்டம் நவம்பர் 20 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

சிறந்த வட்டிச் சலுகை!

இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் வீட்டுக் கடனுக்கான வட்டியை ஒரு வருடத்திற்கு 3.99 சதவீதம் என்ற விகிதத்தில் செலுத்த வேண்டியிருக்கும். மீதமுள்ள வட்டி டாடா ஹவுசிங் மூலம் வழங்கப்படும். டாடா ரியால்டி மற்றும் உள்கட்டமைப்பின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சஞ்சய் தத் இதுகுறித்துப் பேசுகையில், ”கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சில மாதங்களாகவே இந்திய ரியல் எஸ்டேட் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் வழங்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இப்போது வீடு வாங்குவோருக்கு உதவுவது நமது முயற்சியாகும்” என்று கூறியுள்ளார்.

எங்கெல்லாம் வீடு கிடைக்கும்?

டாடா ஹவுசிங் நிறுவனத்தின் இந்த ‘வாவ் இஸ் நவ்’ திட்டத்தின் கீழ், வீட்டுக் கடன்களுக்காக 4 சதவீதத்துக்கும் குறைவான வட்டிக்கு 10 வீட்டு வசதித் திட்டங்களை வழங்கியுள்ளது. இந்தத் திட்டங்கள் டெல்லி என்.சி.ஆர், மும்பை, பெங்களூர், கொச்சி மற்றும் கசௌலி ஆகிய இடங்களில் செயல்பாட்டில் உள்ளன. இந்தத் திட்டங்கள் உடனே குடிபெயரும் வகையில் தயார் நிலையில் உள்ளன. கடந்த மாதம் டாடா ஹவுசிங் ஜீரோ ஸ்டாம்ப் வரியுடன் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருந்தது. கட்டுமானம் இணைக்கப்பட்ட கட்டணத் திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு இச்சலுகை வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2020 அக்டோபர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்