ரயில் பயணம்!
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல இந்தியர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே அதிகமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். நீண்ட தூரப் பயணங்களுக்கான முதல் தேர்வே ரயில்தான். ரயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதோடு, விரைவாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணிக்கின்றனர்.
ஹேப்பி நியூஸ்!
ரயிலில் புக்கிங் செய்து பயணிப்போருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. இப்போது நீங்கள் புக்கிங் செய்யப்பட்ட ரயில் நிலையத்திற்கு (போர்டிங் பாயிண்ட்) பதிலாக வேறு எந்த நிலையத்திலிருந்தும் ரயிலைப் பிடிக்கலாம். இதற்காக ரயில்வே துறை உங்களிடம் எந்த அபராதமும் வசூலிக்காது.
சூப்பர் வசதி!
சில நேரங்களில் திடீரென போர்டிங் ஸ்டேஷனை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். உதாரணமாக, போர்டிங் ஸ்டேஷன் பயணிகளுக்கு வெகு தூரத்தில் இருப்பதால், ரயிலை தவறவிட்டுவிடுவார்கள். எனவே, பயணிகள் சென்றடையும் இடத்தில் ரயில் நின்றால், அங்கேயே பயணிகள் ஏறிக் கொள்ளலாம். பயணிகளின் இந்த தேவையை கருத்தில் கொண்டு, போர்டிங் பாயிண்ட் மாற்றும் வசதியை IRCTC கொண்டுவந்துள்ளது. போர்டிங் பாயிண்ட் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு IRCTC தளத்திலேயே வசதி உள்ளது.
ஆன்லைன் புக்கிங் மட்டும்!
IRCTCயின் இந்த வசதி, பயண முகவர்கள் மூலமாகவோ அல்லது பயணிகள் முன்பதிவு முறை மூலமாகவோ அல்லாமல் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது தவிர, போர்டிங் ஸ்டேஷன் மாற்றத்தை VIKALP ஆப்சனிலும் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நேரம் முக்கியம்!
பயணிகள் தங்களது போர்டிங் ஸ்டேஷனில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னரே அதைச் செய்ய வேண்டும். அதேநேரம், இந்த ஆப்சனைப் பயன்படுத்தி பயணிகள் தங்களது போர்டிங் ஸ்டேஷனை மாற்றியவுடன், முதலில் இருந்த போர்டிங் ஸ்டேஷனுக்கு சென்று ரயிலைப் பிடிக்க முடியாது.
அபராதம் உண்டு!
பயணிகள் போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல் வேறு நிலையத்திலிருந்து ரயிலைப் பிடித்தால் அபராதம் விதிக்கப்படும். அதோடு, மாற்றி ஏறிய போர்டிங் பாயிண்ட் மற்றும் அசல் போர்டிங் பாயிண்ட் இடையே உள்ள கட்டணத்தையும் செலுத்த வேண்டும். IRCTC விதிகளின்படி போர்டிங் ஸ்டேஷனில் ஒருமுறை மட்டுமே மாற்றம் செய்ய முடியும். எனவே நீங்கள் மாற்றங்களைச் செய்யும்போது நன்கு யோசித்து அதைச் செய்ய வேண்டும்.