ஆப்நகரம்

வீடு வாங்கியோருக்கு பெரும் நிம்மதி.. உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவாதம்!

சூப்பர்டெக் நிறுவனத்திடம் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 5 Apr 2022, 3:55 pm
ரியல் எஸ்டேட் நிறுவனமான சூப்பர்டெக் (Supertech) திவாலாகிவிட்டதாக அண்மையில் தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது. இதனால், சூப்பர்டெக் நிறுவனத்திடம் வீடு வாங்கிய ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அச்சத்தில் தள்ளப்பட்டன.
Samayam Tamil supertech


இந்நிலையில், சூப்பர்டெக் நிறுவனத்தில் எமரால்ட் கோர்ட் 40 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கியவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வீடு வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்தும்படி சூப்பர்டெக் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சூப்பர்டெக் நிறுவனம் திவாலாகிவிட்டதாக வெளியான தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் உச்ச நீதிமன்றத்திடம் சூப்பர்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பெரும்பாலான வீடு வாங்கியோருக்கு பணத்தை திருப்பிச் செலுத்துவிட்டதாக சூப்பர்டெக் தெரிவித்துள்ளது.

வீடு வாங்க வேணாம்.. ஆனால் வீடு உங்களோடது.. வாடகையும் வரும்.. இப்படியும் முதலீடு செய்யலாம்!
சூப்பர்டெக்கின் ட்வின் டவர்ஸ் குடியிருப்பில் மொத்தம் 711 பேர் வீடு வாங்கியுள்ளதாகவும், அதில் 652 பேருக்கு பணம் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் சூப்பர்டெக் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.கணேஷ் தெரிவித்தார்.

இன்னும் 59 பேருக்கு மொத்தமாக 14.96 கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், வீடு வாங்கியோரின் நலன் பாதுகாக்கப்படும் என தெரிவித்தனர்.

சூப்பர்டெக் ட்வின் டவர்ஸில் வீடு வாங்கியவர்களுக்கு ஒட்டுமொத்த பணத்தையும் 12% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்