ஆப்நகரம்

2 பான் கார்டு இருக்கா? உடனே இதைப் பண்ணலனா ரூ.10,000 அபராதம்!

ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் ரூ.10,000 வரையில் அபராதம் விதிக்கப்படும். உடனே ஒன்றை சரண்டர் செய்ய வேண்டும். ஈசி வழி இதோ...

Samayam Tamil 12 Jul 2021, 5:49 pm
தனி மனிதனின் முக்கியமான ஆவணமாக பான் கார்டு உள்ளது. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் அதை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்குக் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. பான் கார்டு மூலமாக ஒருவரின் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன. அதிக தொகை கொடுத்து நகை வாங்குவதற்கும் மற்ற பெரிய பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டுகள் அவசியமாக உள்ளன.
Samayam Tamil pan card


எனவே பான் கார்டு வைத்திருப்பது முக்கியமான ஒன்றாகும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் ஆபத்து. சட்டப்படி ஒருவருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே இருக்க வேண்டும். சிலர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து மோசடியில் ஈடுபடுகின்றனர். இது வருமான வரிச் சட்டத்தின் படி குற்றமாகும். இதற்கு 10,000 ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும். எனவே ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் உடனே அதை சரண்டர் செய்துவிட வேண்டும். அதற்கு எங்கும் அலையத் தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே சரண்டர் செய்யலாம்.

வருமான வரித் துறையின் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற முகவரியில் செல்ல வேண்டும்.

அதில் விண்ணப்ப வகையில் Changes of Correction in Existing PAN Data/Reprint of PAN Card என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய படிவம் ஒன்று வரும். அதில் உங்களது பெயர், பிறத தேதி, முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். நீங்கள் சரண்டர் செய்ய விரும்பும் பான் கார்டு விவரத்தையும் குறிப்பிட வேண்டும்.

அந்தப் படிவத்தை submit செய்தவுடன் உங்களுக்கு ஒரு டோக்கன் நம்பர் வழங்கப்படும்.

அடுத்த பக்கத்தில் நீங்கள் சரண்டர் செய்யும் பான் கார்டின் ஸ்கேன் காப்பியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இப்போது உங்களது பான் கார்டு சரண்டர் செய்யப்பட்டுவிடும். இதற்கான உறுதிச் செய்தி மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்