ஆப்நகரம்

இந்தியர்களுக்கு இதைப் பற்றி கவலையே இல்லை.. அப்படி என்ன விஷயம்?

இந்தியர்கள் ரிட்டயர்மெண்ட் குறித்து சிந்திப்பதே இல்லை என ஆய்வு கூறுகிறது.

Samayam Tamil 10 Dec 2021, 4:03 pm
விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும் சூழலில், பணி ஓய்வுக்கான திட்டமிடல் (Retirement Planning) குறித்து இந்தியர்கள் கவலைப்படுவதே இல்லை என ஆய்வு ஒன்று கூறுகிறது.
Samayam Tamil Retirement Plan


ஒவ்வொரு நபரும் தற்கால சேமிப்பு, முதலீடு, நிதிநிலை மட்டுமல்லாமல் எதிர்கால திட்டமிடல், குறிப்பாக பணிஓய்வு பற்றியும் திட்டமிட வேண்டுமென வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். பல்வேறு நாடுகளில் பணிஓய்வுக்கான திட்டமிடல் பற்றிய விழிப்புணர்வும் அதிகம்.

இந்நிலையில், இந்தியர்கள் பணிஓய்வு திட்டமிடல் பற்றி சிந்திப்பது கூட இல்லை என ஒரு சர்வேயில் தெரியவந்துள்ளது. Max life Insurance நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 24 விழுக்காட்டினர் மட்டுமே பணி ஓய்வுக் காலத்துக்கான சேமிப்பு பற்றியே சிந்தித்துள்ளனர்.

LIC Policy: வெறும் 8 ரூபாய் முதலீடு.. 17 லட்சம் வருமானம்!
இந்தியா முழுவதும் 28 நகரங்களில் 35 வயது முதல் 65 வயதினர் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பணி ஓய்வுக் காலத்துக்காக முதலீடு செய்வோரில் 63 விழுக்காட்டினர் தங்களது மருத்துவச் செலவுகளை சந்திப்பதற்காகவே முதலீடு செய்கின்றனர்.

யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்பதற்காக முதலீடு செய்வதாக 47 விழுக்காட்டினரும், பணி ஓய்வுக்காலத்திலும் லைஃப்ஸ்டைலை பராமரிப்பதற்காக முதலீடு செய்வதாக 38 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

இளம் வயதிலேயே பணி ஓய்வுக்காக திட்டமிட வேண்டுமென பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். இளம் வயதிலேயே பணி ஓய்வுக்கு திட்டமிடாதது குறித்து 80 விழுக்காட்டினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். பணி ஓய்வு பற்றி சிந்திக்கக்கூட இல்லை என 23 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்களில் பலர் பணி ஓய்வு குறித்து திட்டமிடாததற்கு காரணம், எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற எண்ணம்தான் என்கிறது இந்த ஆய்வு. பணி ஓய்வுக்கு பின் பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என 45 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். பணி ஓய்வுக் காலத்தை சந்திக்க போதிய சொத்துகள் இருப்பதாக 35 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்