ஆப்நகரம்

மூடப்பட்ட சிறு நிறுவனம்.. கலெக்டரிடம் சிறு குறு தொழில் முனைவோர் புகார்!

முன்னறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட சிறு நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிறு குறு தொழில் முனைவோர் சங்கம் புகார்.

Samayam Tamil 25 May 2022, 3:02 pm
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சிறு நிறுவனத்தை கோவை மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டதாக சிறு குறு தொழில் முனைவோர் புகார் அளித்துள்ளனர்.
Samayam Tamil TACT


கோவை கவுண்டம்பாளையம்- இடையர்பாளையம் இடையே உள்ள செளடாம்பிகா நகரில் இயங்கி வரும் சுரேஷ் இன்ஜினியரிங் மற்றும் சதீஷ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கோவை மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் அந்த கம்பெனி செயல்பட வழிவகை செய்ய வலியுறுத்தியும் சிறுகுறு தொழில் முனைவோர் சங்கம் (Tamil Nadu Association of Cottage and Micro Enterprises - TACT) சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அச்சங்கத்தின் தலைவர் தலைவர் ஜேம்ஸ் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து பேசிய ஜேம்ஸ், “கோவை மாவட்டம் குறு சிறு தொழில்கள் நிறைந்த மாவட்டம். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு குறு சிறு தொழில்கள் நடைபெற்று வந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை நாங்கள் சந்தித்து வருகிறோம்.

Startup: விரட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.. ஊழியர்கள் கலக்கம்!
இந்நிலையில் கடந்த 21ஆம் தேதியன்று கவுண்டம்பாளையம் பகுதி செளடாம்பிகா நகரில் இயங்கி வந்த கம்பெனியை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மாநகராட்சி அலுவலர்கள் மூடிவிட்டனர். இது குறித்து அப்போதே மாநகராட்சி ஆணையரை சந்திக்க முயன்று போது அவர் இல்லாததால் அவரது தொலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பினோம். ஆனால் எவ்வித பதிலும் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியரை சந்தித்து அந்த கம்பெனியை திறக்க வழிவகை செய்ய வேண்டி வந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்