ஆப்நகரம்

சொந்த தொழில் தொடங்க விருப்பமா? ஜிஎஸ்டி பயிற்சி வழங்கும் தமிழ்நாடு அரசு!

சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஜிஎஸ்டி மற்றும் மின்வழிச் சீட்டு பற்றி தமிழ்நாடு அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 7 Mar 2023, 10:36 am
சொந்தமாக தொழில் தொடங்கி சாதிக்க விரும்புவோர் தங்களது தொழிலுக்கான நுணுக்கங்களை மற்றும் கற்றுக்கொண்டால் போதாது. தொழிலுக்கு தேவையான கணக்கு விதிகள், ஆவணங்கள், ஜிஎஸ்டி வரி முறை, மின் வழிச் சீட்டு மற்றும் சட்டக் கூறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
Samayam Tamil gst e way bill
gst e way bill


இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஏற்கெனவே பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இத்துடன் தற்போது ஜிஎஸ்டி மற்றும் மின்வழிச் சீட்டு பற்றி ஆன்லைனில் பயிற்சி வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.

பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி GST & E-way Billing (Advance) தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு குறித்த இணையவழி பயிற்சி (3 நாட்கள்) பயிற்சியினை வரும் 09.03.2023 தேதி முதல் 11.03.2023-ம் தேதி வரை (காலை 10.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை) வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் பொருட்கள் சேவை மற்றும் வரி மற்றும் மின் வழிச் சீட்டு & அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், போன்றவை பயிற்றுவிக்கப்படும். மேலும், இப்பயிற்சியில் அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

முன்பதிவு அவசியம்:

முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.

அலைபேசி: 9444556099, 9677152265, 044-22252081/22252082.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்