ஆப்நகரம்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 லட்சம்... நீங்கள் வாங்கி விட்டீர்களா?

தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சுய உதவிக் குழுவுக்கும் ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

Samayam Tamil 10 Jun 2020, 8:40 am
கொரோனா ஊரடங்கால் இந்திய நகர்ப்புறங்களில் பெரும்பாலான மக்கள் வேலை எதுவும் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். கொரோனா நிவாரணமாக பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.500 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. இதுமட்டுமல்லாமல், சுயசார்பு இந்தியா திட்டம் மூலமாகப் பல்வேறு நிதியுதவிகளை அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் பிரதமரின் ஊஜ்வாலா திட்டத்தின் மூலமாக மூன்று இலவச சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தீன்தயாள் அந்யோத்யா யோஜனா தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் தமிழகத்தில் நகர்ப்புற வீடுகளில் வறுமை ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil SHG


தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழக வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இதன் உறுப்பினர்கள் தாங்களாகவே சுய உதவிக் குழுவில் பதிவு செய்துகொண்டு, அந்தக் குழுவுடன் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஒவ்வொரு சுய உதவிக்குழுவும், வங்கிகளுடன் இணைக்கப்பட்டு முதல் கட்டமாக ரூ.1 லட்சம் கடனுதவி பெறுகின்றன. அதன் பின்னர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் இரண்டாவது, மூன்றாவது இணைப்பின்படி கடன்கள் வழங்கப்படுகின்றன.

தங்கம் விலை: ஷாக் கொடுத்த தங்கம்... எவ்ளோ கூடிருக்கு?

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்புக் கடனாக ரூ.1 லட்சம் வரை கடன் வழங்குமாறு தமிழக அரசு வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மிகக் குறைந்த வட்டி விகிதத்துடன் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணையைத் தொடங்க செப்டம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கொவிட்-19 விழிப்புணர்வு Zoom செயலி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் அவர்கள் பொதுமக்களுக்கு கொவிட்-19 பற்றிய தகவலைப் பரப்ப முடிகிறது. கொரோனா ஊரடங்கால் தங்களது குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கடன் உதவி தங்களது சிக்கலில் இருந்து மீண்டுவர உதவுவதாகவும் சுய உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

Sensex Today: சறுக்கிய சென்செக்ஸ்... எந்தெந்த பங்குகளுக்கு இழப்பு?

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு கொவிட்-19 திட்டத்தின் கீழ் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.5,000 வீதம் ஒவ்வொரு சுய உதவிக் குழுவுக்கும் அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆறு மாத காலத்துக்குப் பின்னர் உறுப்பினர்கள் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல் 7 சதவீத வட்டி விகிதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை நகைக் கடனும் வழங்கப்படுகிறது. இதை 6 மாதங்களில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

பெட்ரோல் விலை: இந்த நேரத்தில் இப்படியொரு விலையேற்றமா?

ஊரடங்கு போன்ற சிக்கலான காலங்களில் குடும்பத்தை நடத்தப் பல்வேறு கைத்தொழில்களைச் செய்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பணம் சம்பாதித்து வருவதாகவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் சுய உதவிக் குழுக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்