ஆப்நகரம்

தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு தெரியுமா?

2020 டிசம்பர் மாதத்தில் தமிழகத்தின் ஜிஎஸ்டி வசூல் 8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 2 Jan 2021, 7:06 pm
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டியின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இந்த இலக்கை அடைவது ஒவ்வொரு மாதமும் பெரும் சிரமமாக இருந்து வருகிறது. கொரோனா வந்த பிறகு ஜிஎஸ்டி வரி வசூல் பெரும் பாதிப்பைச் சந்தித்து, இலக்கை அடைவதே சிரமமாக இருந்தது. எனினும், சென்ற நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் இலக்கைத் தாண்டியது. அதேபோல, நடந்து முடிந்த டிசம்பர் மாதத்திலும் ஜிஎஸ்டி வசூல் இலக்கைத் தாண்டியுள்ளது.
Samayam Tamil gst


இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020 டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டியின் கீழ் ரூ.1,15,174 கோடி கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.21,365 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.27,804 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியின் கீழ் இறக்குமதிக்கான ரூ.27,050 கோடி உட்பட மொத்தம் ரூ.57,426 கோடி கிடைத்துள்ளது. செஸ் வரியாக ரூ.8,579 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே ஜிஎஸ்டி வருவாய் ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

வீடு கட்ட மானியம்... விண்ணப்பிப்பது எப்படி?

இந்திய மாநிலங்களிலேயே அதிகபட்சமாக, ஒடிசாவின் ஜிஎஸ்டி வசூலில் 20 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2020 டிசம்பரில் ஒடிசாவின் ஜிஎஸ்டி வசூல் ரூ.2,860 கோடியாக இருந்துள்ளது. 2019 டிசம்பரில் ரூ.2,383 கோடி மட்டுமே கிடைத்தது. ஒடிசாவைத் தொடர்ந்து ராஜஸ்தானில் 16 சதவீத வளர்ச்சியும், ஆந்திரப் பிரதேசத்தில் 14 சதவீத வளர்ச்சியும், குஜராத்தில் 13 சதவீத வளர்ச்சியும், ஜார்கண்டில் 11 சதவீத வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், 2020 டிசம்பர் மாதத்தில் ரூ.6,905 கோடி கிடைத்துள்ளது. 2019 டிசம்பரில் ரூ.6,422 கோடி மட்டுமே வசூலானது. இது 8 சதவீத வளர்ச்சியாகும். கேரளா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் 8 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்