ஆப்நகரம்

உணவுப் பொருள் விலை: தமிழகம் முன்னிலை!

வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்தது.

Samayam Tamil 19 Jun 2020, 7:59 pm
வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் குறித்த விவரங்களைத் தொழிலாளர் அலுவலகம் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள 600 மாதிரி கிராமங்களில் இருக்கும் குறிப்பிட்ட மையங்களுக்கு நேரடியாகச் சென்று சேகரித்த விலைத் தகவல்களின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil food price


கொரோனா ஊரடங்கு காரணமாக, மே மாதத்தில் நேரடியாகவும் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் 4,333 கிராமங்களில் இருந்து விலை விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி, மே மாதத்துக்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் முறையே 5 மற்றும் 6 புள்ளிகள் அதிகரித்து 1019 மற்றும் 1025 ஆக இருந்தன. வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களின் பொது குறியீடு அதிகரித்ததில் உணவு பெரும் பங்கு வகித்துள்ளது. உணவுப் பொருட்களுக்கான குறியீடு 4.44 புள்ளிகள் மற்றும் 4.70 புள்ளிகளாக இருந்தது.

Stock Market: அசத்திய சென்செக்ஸ்... கெத்து காட்டிய அம்பானி

அரிசி, துவரம் பருப்பு, மசூர் பருப்பு, கடலை, எண்ணெய், ஆட்டிறைச்சி, கோழி, காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருந்தன. வேளாண் தொழிலாளர்களைப் பொறுத்தவரை 14 மாநிலங்களில் இது 2 முதல் 19 புள்ளிகள் வரை அதிகரித்தது. 5 மாநிலங்களில் 1 முதல் 7 புள்ளிகள் குறைந்திருந்தது. இதில் 1,208 புள்ளிகளோடு தமிழகம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 788 புள்ளிகளோடு இமாசலப் பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது. ஊரகத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் 15 மாநிலங்களில் 1 முதல் 18 புள்ளிகள் வரை அதிகரித்தது. 5 மாநிலங்களில் 1 முதல் 7 புள்ளிகள் குறைந்திருந்தது. 1,194 புள்ளிகளோடு தமிழகம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 838 புள்ளிகளோடு இமாசலப் பிரதேசம் கடைசி இடத்தில் இருக்கிறது.

பொருளாதார வளர்ச்சியா... அப்டீன்னா? வாய்ப்பே இல்லை!

வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில், அரிசி, சோளம், ராகி, ஆட்டிறைச்சி, கோழி, காய்கறி மற்றும் பழங்கள், பீடி மற்றும் முடி திருத்துவோர் கட்டணம் ஆகியவற்றின் விலை அதிகரிப்பின் காரணமாக கர்நாடகா அதிகபட்ச வளர்ச்சியைச் சந்தித்தது. அதேநேரம் சோளம், வெங்காயம், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றின் விலை குறைந்ததன் மூலமாக, வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச வீழ்ச்சியை பீகார் சந்தித்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்