ஆப்நகரம்

Pension: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி ஓய்வு.. எகிறும் பென்சன் செலவுகள்!

நடப்பு ஆண்டில் 20,000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வுபெறுவதால் தமிழ்நாடு அரசுக்கு பென்சன் செலவு உயரவிருக்கிறது.

Samayam Tamil 3 Jun 2022, 2:44 pm
நடப்பு நிதியாண்டில் மட்டும் 20,000 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர். இதனால் தமிழ்நாடு அரசின் பென்சன் செலவு கடுமையாக அதிகரித்து சுமார் 40,000 கோடி ரூபாயாக உயரவிருக்கிறது.
Samayam Tamil govt employees


கடந்த மே 31ஆம் தேதி சுமார் 5200 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி ஓய்வுபெற்றுள்ளனர். மேலும், இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சுமார் 15,000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வுபெறுகின்றனர். இதனால் அவர்களுக்கு பென்சன் செலுத்துவதற்கான செலவு தமிழ்நாடு அரசுக்கு உயரும் என தெரிகிறது.

2021-22ஆம் ஆண்டில் பென்சனுக்காக தமிழ்நாடு அரசு 26,410 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான மாத பென்சன் மற்றும் ஒரே செட்டில்மெண்ட் இரண்டுக்கும் இத்தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் 39,508 பேருக்கு பென்சன் வழங்கப்பட வேண்டும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.

Pension: ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி.. நிதியமைச்சர் பிடிஆர் சூப்பர் அறிவிப்பு!
இதில் வழக்கமான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் ஒரே செட்டில்மெண்ட் பெறுவோர் உள்ளிட்டோர் அடங்குவர். பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு தேவையான பணம் வழங்குவதற்கு அரசிடம் போதிய நிதி இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், மே 31ஆம் தேதி மட்டும் 25,000 அரசு ஊழியர்கள் பணி ஓய்வுபெற்றதாக சில தகவல்கள் வெளியாகின. இது தவறான தகவல் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளிலும் ஊழியர்கள் பணி ஓய்வுபெற்றுள்ளனர். இவர்கள் நிதியமைச்சகத்தின் கீழ் வரமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்