ஆப்நகரம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்.. கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்!

தமிழக அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை பார்க்க முடிவுசெய்துள்ளனர்.

Samayam Tamil 6 Aug 2022, 12:01 pm
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) நீக்கிவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
Samayam Tamil ptr


பல்வேறு துறை ஊழியர்கள் அடிக்கடி போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறது. இத்திட்டத்தை அமல்படுத்தினால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் எனவும் அதிகம் செலவாகும் எனவும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறி வருகிறார்.

நிதி நெருக்கடியை தமிழக நிதியமைச்சர் காரணம் காட்டுவதை தமிழக அரசு ஊழியர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றனர்.

”அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு செலவு செய்யவும், புதிய திட்டங்களைச் செயல்படுத்தவும் வரி வசூல் மூலமாகவே அரசு சமாளிக்க வேண்டும். வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் உயர்ந்துவிட்டன. வரி வசூலும் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கையில் அதுபோன்ற நிதி ஆதாரங்களை வைத்து நலத்திட்டங்களுக்கு செலவழிக்கலாம். அப்படிச் செய்யாமல் அரசு ஊழியர்களுக்கான பென்சன் நிதியை ஏன் பயன்படுத்த வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.

பழைய பென்சன் திட்டம் ஏன் கூடாது? அரசு ஊழியர்கள் கேள்வி.. அமல்படுத்துமா ஸ்டாலின் அரசு!!

இந்தியாவில் இப்போது பழைய பென்சன் திட்டத்தை ராஜஸ்தான் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் செயல்படுத்தி விட்டன. ஆனால், பல்வேறு விஷயங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தமிழகம் இந்த விஷயத்தில் மற்ற மாநிலங்களை விடவும் மிகவும் கடுமையாக இருப்பது ஏன் என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பழைய பென்சன் திட்டம் மட்டுமல்லாமல், அகவிலைப்படி போன்ற இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட அரசு ஊழியர்கள் முடிவுசெய்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டம்.. சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்!

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில உயர்நிலை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திடவேண்டும். 3 சதவிகித அகவிலைப்படி/சரண்விடுப்பு சலுகையை உடனடியாக வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், தொடர்ந்து அரசு அலுவலர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் செயல்களைக் கண்டிக்கும் விதமாகவும் அனைத்து நூலகர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியுமாறு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் ஆ.செல்வராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்