ஆப்நகரம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இவ்வளவு உதவி.. தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு தரப்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Jul 2022, 8:10 am
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பாக இன்று (ஜூலை 7) தேசியத் தலைநகர் டெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பாக தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். தமிழ்நாட்டு மக்களுக்காக ரேஷன் திட்டத்தின் வாயிலாகப் பல்வேறு உதவிகளைத் தமிழக அரசு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
Samayam Tamil ration card


அவர் மேலும் பேசுகையில், ”தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூகப் பாகுபாடின்றி உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. 2016 நவம்பர் 1ஆம் தேதி முதல் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 அமல்படுத்தப்பட்ட நிலையிலும் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் என்ற நிலையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

வீடு தேடி வரும் ரேஷன் கார்டு.. இனி பிரச்சினையே இல்லை!

அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சிறப்பு பொது விநியோகத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ ஆட்டா மாவு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை குறைந்த விலையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரிய நிம்மதி.. உங்களுடைய கார்டு ரத்து செய்யப்படாது!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகைப் பொருட்களையும், ரூ.4000 ரொக்கத் தொகையும் 2021 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வழங்கியது. அதோடு, 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 வகையான ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களையும் வழங்கியது.

இனி ரேஷன் வாங்க முடியாது.. ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.. அரசு அதிரடி!

தமிழ்நாட்டிலுள்ள பொது விநியோகத் திட்ட அங்காடிகளில் நடைபெறும் பரிவர்த்தனைகளில் 98 சதவீதம் அளவு கைவிரல் ரேகை பதிவு மூலம் நடைபெறுகிறது. இதனால் உரிய குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவது உறுதி செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்