ஆப்நகரம்

Pension: ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி.. நிதியமைச்சர் பிடிஆர் சூப்பர் அறிவிப்பு!

பென்சன் வாங்குவோருக்கு புதிய வசதிக்காக தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

Samayam Tamil 31 May 2022, 7:54 pm
தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி, இனி தமிழகத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வீணாக அலையத் தேவையில்லை.
Samayam Tamil ptr palanivel thiagarajan


ஒவ்வொரு ஓய்வூதியதாரரும் தொடர்ந்து பென்சன் பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழை (life certificate) சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று.

வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொடர்ந்து கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினால் பென்சன் கிடைக்காது.

எல்லாருக்கும் பென்சன் கட்டாயம்.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
எனினும், கொரோனா நெருக்கடி காலத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், ஓய்வூதியதாரரின் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகையில், தமிழக அரசும் இத்திட்டத்துக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அஞ்சல் துறை வாயிலாக ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (India Post Payments Bank) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி, ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திலேயே நேரடியாக வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளப்படும்.

இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெறுவது எளிதாகும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்