ஆப்நகரம்

தமிழ்நாடு ஓய்வூதியதாரர்கள் முதலிடம்.. மத்திய அரசு வெளியிட்ட சர்பிரைஸ் தகவல்!

நாட்டிலேயே தபால் துறையின் வாழ்நாள் சான்றிதழ் சேவையை அதிகம் பயன்படுத்திய தமிழ்நாடு ஓய்வூதியதாரர்கள்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 8 Dec 2022, 1:34 pm
ஓய்வூதியதாரர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழ் (Life certificate) சமர்ப்பிக்க வேண்டும். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியதாரர்களுக்கு தொடர்ந்து பென்சன் கிடைக்கும்.
Samayam Tamil pensioners
pensioners


இதுமட்டுமல்லாமல், தபால் துறை வாயிலாக தபால் காரர்கள் மற்றும் கிராமின் டாக் சேவகர்கள் வாயிலாக ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் சேவையையும் இந்திய தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் மாநில வாரியாக தபால் துறை வாயிலாக பெறப்பட்ட வாழ்நாள் சான்றிதழ்கள் குறித்த விவரத்தையும், ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் நேரடியாக வீட்டிலேயே என்னென்ன சேவைகளை வழங்க அரசு திட்டமிட்டிருக்கிறது என்ற தகவலையும் நாடாளுமன்றத்தில் ராஜேஷ்பாய் சுதாசமா எம்.பி கேட்டார்.

இதற்கு மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், தற்போது இந்திய தபால் துறை வங்கி (India Post Payments Bank) வாயிலாக நேரடியாக வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே பென்சன் சேவை மற்றும் உங்கள் பணம் உங்கள் கையில் (Direct Benefit Transfer) திட்டம் வாயிலான பயன்களும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

EMI தொகை உயர்வு.. இந்த வங்கிகளில் உங்களுக்கு லோன் இருக்கா?
இதுபோக, ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வீட்டிற்கே நேரடியாக சென்று ஆதார் சேர்ப்பு சேவை வழங்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதுபோக, இந்திய தபால் துறை இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்ட (Registered) மற்றும் ஸ்பீடு போஸ்ட் (Speed Post) பார்சல்கள் வீட்டிற்கே சென்று பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மாநிலங்கள் வாயிலாக நேரடியாக ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே சென்று பெறப்பட்ட வாழ்நாள் சான்றிதழ்களின் எண்ணிக்கை பற்றிய விவரத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த 2021-22ஆம் நிதியாண்டில் மொத்தம் 4,54,316 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டும் 5,27,286 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாட்டில் 2021-22ஆம் நிதியாண்டில் மொத்தம் 68,818 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டும் 2,38,811 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 2021-22ஆம் நிதியாண்டில் மொத்தம் 921 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன. நடப்பு 2022-23ஆம் நிதியாண்டில் அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டும் 2,003 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், தமிழ்நாடு ஓய்வூதியதாரர்கள்தான் இந்தியாவிலேயே அதிகபட்சமாக தபால் துறையின் வாழ்நாள் சான்றிதழ் சேவையை பயன்படுத்தியுள்ளனர். நடப்பு நிதியாண்டில் அக்டோபர் 31ஆம் தேதி வரை மட்டும் 2,38,811 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

இரண்டாம் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் அக்டோபர் 31ஆம் தேதி வரை 51,352 வாழ்நாள் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளன.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்