ஆப்நகரம்

இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு போனஸ்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகை அறிவித்துள்ளது.

Samayam Tamil 10 Aug 2022, 12:57 pm
டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் (Tata AIA Life Insurance ) நிறுவனம் தனது பாலிசிதாரர்களுக்கு 861 கோடி ரூபாய் போனஸ் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இத்துடன் ஐந்தாவது ஆண்டாக பாலிசிதாரர்களுக்கு லாபத்தை பிரித்து போனஸ் தொகையாக வழங்கியுள்ளதாக டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.
Samayam Tamil insurance


2021ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட போனஸ் தொகையை காட்டிலும் 2022ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை 20% உயர்ந்துள்ளதாக டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து பாலிசிதாரர்களுக்கும் போனஸ் தொகைக்காக 861 கோடி ரூபயய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2022 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இன்சூரன்ஸ் பாலிசி வைத்திருந்தவர்கள் அனைவருமே போனஸ் தொகை பெறத் தகுதியானவர்கள் என டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Jio Independence Day Offer: ஜியோ சூப்பர் ஆஃபர்.. எக்ஸ்ட்ரா சலுகைகள் உண்டு!
அறிவிக்கப்பட்ட போனஸ் தொகை பாலிசிதாரர்களுக்கான பலன்களில் சேர்க்கப்படும் என டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சமித் உபத்யா தெரிவித்துள்ளார்.

மேலும், டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இன்சூரன்ஸ் பிரீமியம் வாயிலான வருமானம் 2021ஆம் நிதியாண்டில் 3416 கோடி ரூபாயில் இருந்து 2022ஆம் ஆண்டில் 4455 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது 30% உயர்வாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்