ஆப்நகரம்

இனி டாடா காரையும் வாங்க முடியாது போலயே!!

ஜனவரி மாதத்திலிருந்து கார்களின் விலையை உயர்த்தப்போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 4 Dec 2019, 6:45 pm
இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இக்கட்டான சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, பொருளாதார மந்தநிலையால் தேவை குறைவு, வாகன எஞ்சின் மாற்ற விதிமுறை, வாகன அச்சுக் கட்டுப்பாடுகள், எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டுக்கு மாறுவது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சந்தித்துள்ளன.
Samayam Tamil இனி டாடா காரையும் வாங்க முடியாது போலயே


புத்தாண்டிலிருந்து மாருதி கார் வாங்குறது கஷ்டம்!

இதுபோன்ற சூழலில் நிறுவனங்களுக்கான சுமையை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வாகனங்களின் விலையை உயர்த்தும் முடிவுக்கு நிறுவனங்கள் வந்துள்ளன. ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்தப் போவதாக சமீபத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதிரடியில் இறங்கியுள்ளது.


இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பணம்!

வாகனப் புகைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின் காரணமாக ஜனவரி முதல் கார்களுக்கான விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்-5 எஞ்சின் விதிமுறை கட்டாயமாக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னரே ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

சுந்தர் பிச்சைக்கு அடித்தது ஜாக்பாட்... ஆல்பபெட் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு!

தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.4.39 லட்சம் முதல் ரூ.16.85 லட்சம் வரையில் விலைகொண்ட கார்களை இந்தியாவில் விற்பனை செய்துவருகிறது. இவற்றின் விலை ஜனவரி முதல் உயர்த்தப்படும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் மாயங்க் பரீக் கூறியுள்ளார். சரியான விலை உயர்வு விகிதம் குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை என்றாலும், ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையில் விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்