ஆப்நகரம்

கார் விலை உயரப்போகுது.. டாடா முடிவு.. திடீர்னு ஏன் இப்படி?

கார்களின் விலையை உயர்த்துவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டம்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 6 Dec 2022, 12:22 pm
முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) தனது கார்களின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதமே கார்களின் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil tata cars


இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தற்போது டியாகோ, அல்ட்ராஸ், பஞ்ச், ஹாரியர், நெக்ஸான், சஃபாரி உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில் டியாகோ மற்றும் நெக்ஸான் ஆகிய கார்கள் எலெக்ட்ரிக் கார்களாகவும் வருகின்றன.

அண்மைக்காலமாக டாடா கார்களின் விற்பனையும் உயர்ந்து வருகிறது. இந்த சூழலில், டாடா கார்களின் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இத்தகவல் டாடா கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியாகியுள்ளது.

நானும் மூன்லைட்டிங் செஞ்சிருக்கேன்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கலகல பேச்சு!
கார்களின் விலை உயர்த்தப்படுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று, இந்தாண்டு முழுவதும் உலோகங்களின் விலை மிக உயர்வாகவே இருந்தது. அண்மையில் சர்வதேச சந்தையில் உலோகங்களின் விலை குறைந்தாலும் கூட, ஏற்கெனவே விலை உயர்வால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிப்பதற்காக கார் விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

அண்மையில் சர்வதேச சந்தையில் உலோகங்களின் விலை குறைந்துள்ளது. இது கார் விலையில் எதிரொலிக்க இன்னும் ஒரு காலாண்டு ஆகிவிடும் என சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது காரணம், வாகனப் புகை வெளியீடுக்கான புதிய விதிமுறைகள்தான் (Emission norms). 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதன்படி, கார்களில் புதிய கருவிகளும், உபகரணங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். இதற்காகவும் கார்களின் விலை உயர்த்தப்பட இருக்கிறது.

ஏற்கெனவே இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki) ஜனவரி மாதம் முதல் கார் விலை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்