ஆப்நகரம்

ஜோஹோவுடன் புதிய பாதையில் டாடா பிளே ஃபைபர்

ஜோஹோ நிறுவனத்துடன் இணைந்து டாடா பிளே ஃபைபர் தனது ஹெச்.ஆர் அமைப்பை முழுமையாக மாற்றியுள்ளது மட்டுமல்லாமல் ஊழியர்களின் எண்ணிக்கை 400% உயர்ந்துள்ளது.

Samayam Tamil 19 May 2022, 7:01 pm
2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது டாடா பிளே ஃபைபர் (Tata Play Fiber) நிறுவனம் மிக எளிதாக வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) முறைக்கு மாறியது. ஊழியர்களின் எண்ணிக்கை 400% உயர்ந்ததையும் ஹெச்.ஆர் துறை (HR) எளிதாக கையாண்டது. இதற்கு காரணம், ஏற்கெனவே அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்தான். முதலில் டிஜிட்டல் முறை, பின்னர் ஆப் வழி பரிவர்த்தனைகள் என மாற்றங்களை கொண்டதாக டாடா பிளே ஃபைபரின் தலைமை ஹெச்.ஆர் அதிகாரி அமித் ராய் கூறுகிறார்.
Samayam Tamil Tata Play Fiber - Zoho


டாடா பிளே ஃபைபர் நிறுவனம் 2019ஆம் ஆண்டிலேயே டிஜிட்டல் மாற்றத்திற்கான திட்டத்தை ஏற்படுத்தியதில். இதில், டிஜிட்டல் மாற்றத்தை முதலில் கொண்டுவர ஹெச்.ஆர் துறை தேர்வு செய்யப்பட்டது.

இதற்காக பல்வேறு நிறுவனங்களை ஆய்வு செய்தபின் ஜோஹோ பீப்பிள் பிளஸ் (Zoho People Plus) சேவையை தேர்வு செய்தது அமித் ராயின் குழு. இந்நிறுவனம் கிளவுட் அடிப்படையிலான ஹெச்.ஆர் நடைமுறையை வழங்குகிறது. திறமைகளை ஈர்ப்பது, ஊழியர்களை நிர்வகிப்பது, மைய மனித வளம், தொடர்பு உள்ளிட்ட அனைத்து தீர்வுகளையும் ஜோஹோ பீப்பிள் பிளஸ் வழங்குகிறது.

மாற்றத்தின் பலன்கள்


ஜோஹோ பீப்பிள் பிளஸ் அமல்படுத்தப்பட்டதால் 21 ஹெச்.ஆர் சேவைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. சுமார் 100 வேலைகள் ஆட்டோமேட்டிக்காக மாற்றப்பட்டு ஆப் வழி பரிவர்த்தனைகள் கொண்டுவரப்பட்டன. கடினமான விஷயங்கள் அனைத்தும் எளிதாக்கப்பட்டன. ஊழியர்களை பணியமர்த்தும் நேரமும் பாதியாக குறைக்கப்பட்டு 90 நிமிடமானது.

மூன்றாம் நபர் அமைப்புகளை எளிதாக இணைப்பது இன்னொரு பலன். டாடா பிளே ஃபைபர் ஓலா, ஊபர், மெடி அசிஸ்ட், யூஐபி, ஐடிஃபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை பயன்படுத்துகிறது. இவர்களை ஒருங்கிணைப்பது தற்போது எளிதாகிவிட்டதாக அமித் ராய் கூறுகிறார்.

ஒருங்கிணைப்புகளும், ஆட்டோமேஷன்களும் மொத்தமாக சேர்ந்து ஹெச்.ஆர் குழு ஒவ்வொரு மாதமும் 32 மணி நேரம் சேமிக்க உதவியுள்ளன. இந்த நேரம் மற்ற வேலைகளுக்கு இப்போது பயன்படுகிறது.

டாடா பிளே ஃபைபர் நிறுவனம் ஜீஹோ அனாலிடிக்ஸ் (Zoho Analytics) அமைப்பையும் சேர்த்து நடைமுறைப்படுத்தியுள்ளது. ஜோஹோ அனாலிடிக்ஸ் ஒரு சுய சேவை தகவல் பகுப்பாய்வு மென்பொருள் ஆகும். இதன் மூலம் ஹெச்.ஆர் சேவைகளின் தகவல்களை சேர்த்து ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் பணியமர்த்தல், ஊழியர் செயல்திறன், செலவுகள், தொழில் முடிவுகள், கொரோனா பாதிப்பு, தடுப்பூசி போட்டவர்களின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பார்க்க முடியும்.

அப்ரைசல்

செயல்திறன் நிர்வாகம் என்பது நிறுவனங்கள் திணறக்கூடிய கடினமான வேலையாகும். ஜோஹோவுக்கு முன் டாடா பிளே ஃபைபருக்கு செயல்திறன் நிர்வாகம் கடினமாக இருந்தது. ஆனால் ஜீஹோவால் எல்லாம் எளிதாகிவிட்டது. இதற்கு முன் அப்ரைசல் முடிந்தால் பிரிண்டட் லெட்டர்கள் கூரியரில் அனுப்பிவைக்கப்படும்.

ஜோஹோ வாயிலாக டாடா பிளே ஃபைபர் ஊழியர்களின் இலக்குகள் தரப்படுத்தப்பட்டு இலக்கு நிர்ணயித்தல் 7 நிமிடங்களுக்குள் முடிந்துவிடுகிறது. இலக்கு நிர்ணயிப்பது அப்ரைசலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய அமைப்பு மாற்றப்பட்டு டிஜிட்டல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அணுகுமுறை

டாடா பிளே ஃபைபர் நிறுவனம் டிஜிட்டல் மாற்றத்தின் வாயிலாக ஹெச்.ஆர் துறையில் பலன்களை அனுபவித்து வரும் நிலையில், ஒரு குழுவுக்கு மட்டுமல்லாமல் மொத்த நிறுவனத்தையும் டிஜிட்டல்மயப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

ஒரு துறையில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக மாற்றத்தை கொண்டுவர நிறுவனத்துக்குள் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமித் ராய் கூறுகிறார். ஹெச்.ஆர் துறையில் வெற்றி கிடைத்ததை தொடர்ந்து ஜோஹோவுடன் மேலும் இணைந்து முயற்சிக்க டாடா பிளே ஃபைபர் முடிவு செய்துள்ளது.

இதன்படி, டாடா பிளே ஃபைபர் நிறுவனம் தனது மற்ற துறைகளிலும் டிஜிட்டல் மாற்றங்களை கொண்டுவர ஜோஹோவின் உதவியை நாடியுள்ளது. ‘ஆட்டோ பைலட்’ என இத்திட்டத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்காக ஜோஹோ ஒன் (Zoho One) சேவையை டாடா பிளே ஃபைபர் சப்ஸ்கிரைப் செய்துள்ளது. இதன் மூலம் நிறைய பணத்தை சேமிக்க முடியும் எனவும், உலகத்தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும் எனவும் அமித் ராய் கூறுகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்