ஆப்நகரம்

ஏர் இந்தியா பற்றி தினமும் மெசேஜ் வருவது.. சந்திரசேகரன் உடைத்த ரகசியம்!

ஏர் இந்தியா குறித்து தனக்கு தினமும் குறை, நிறை செய்திகள் வருவதாக சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 Apr 2023, 11:07 am
ஏர் இந்தியா (Air India) நிறுவனம் குறித்து தனக்கு தினமும் இமெயில் அனுப்பப்பட்டு வருவதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் (N.Chandrasekaran) தெரிவித்துள்ளார்.
Samayam Tamil n chandrasekaran
n chandrasekaran


ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் மொத்தமாக வாங்கிவிட்டது. ஏர் இந்தியாவை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது டாடா குழுமம். மேலும் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 470 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியபோதே அதை உலகத்தரம் வாய்ந்த ஏர்லைன் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்தது. இதற்கு ஏற்ப தலைமை பொறுப்புகளில் நியமனம், புதிய ஊழியர்கள், அதிக சம்பளம், விமானங்களில் விதவிதமான உணவுகள் என பல்வேறு மாற்றங்களை ஏர் இந்தியா கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா குறித்து குறைகள், நிறைகள் என தினமும் நான்கைந்து இமெயில்கள், வாட்சப் மெசேஜ்கள் வருவதாக டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். BT MindRush 2023 நிகழ்வில் சந்திரசேகரன் பங்கேற்று உரையாடினார்.

அப்போது அவர், “இந்தியாவில் அனைவருமே ஏர் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தினமும் ஏர் இந்தியா குறித்து எனக்கு பல்வேறு இமெயில்கள் வருகின்றன. சிலர் ஏர் இந்தியாவில் பணிபுரிய விரும்புகின்றனர். சிலர் எனக்கு அறிவுரை வழங்குகின்றனர்.

சிலர் விமானம் நன்றாக இருந்ததாக சொல்கின்றனர். சிலர் விமானம் சரியில்லை ஆனாலும் வருகை நேரத்திலும், வாடிக்கையாளர் சேவையிலும் சில முன்னேற்றம் இருக்கிறது என்று கூறுகின்றனர். தினமும் இமெயில், வாட்சப் என 4- 5 செய்திகள் வருகின்றன.

இந்த இமெயில்களுக்கு நான் பதில் அளிப்பேன். நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயங்களில் நடவடிக்கை எடுப்பேன். இல்லை எனில் கொஞ்சம் பொறுமையாக இருந்து எங்களுக்கு நேரம் கொடுக்க வேண்டும் என கேட்பேன். தற்போது ஏர் இந்தியாவின் மனிதவளத் துறையில் மாற்றம் நடந்து வருகிறது. தொழில்நுட்பத்தை முழுவதுமாக மாற்றிவிட்டோன். எல்லா விமானங்களும் மாறிவிடும். விமானங்களுக்கான மிகப்பெரிய ஆர்டரை கொடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்