ஆப்நகரம்

புது தொழில்நுட்பம் தெரிஞ்சா.. ‘டபுள்’ சம்பளம்: அள்ளி அள்ளி கொடுக்கும் டி.சி.எஸ்.,!

பெங்களுரு: டி.சி.எஸ்., லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழிநுட்பம் திறமை கொண்ட புதிதாக தேர்வு செய்த 1000 பேருக்கு வழக்கத்தை விட இரண்டு மடங்கு சம்பளம் வழங்கியுள்ளது.

Samayam Tamil 3 Oct 2018, 1:55 pm

ஹைலைட்ஸ்:

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐடி நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேரும் இந்திய இன்ஜினியர்களுக்கு ஆரம்பத்தில் ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
இந்திய இன்ஜினியர்களை தங்களின் பணியிடங்களுக்கு அதிகளவில் தேர்வு செய்யும் நிறுவனங்களில் டாடா கன்செல்டன்சி சர்வீஸஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும், இன்ஜினியரிங் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தி, அதில் தேர்வாகும் சிறந்த திறமையான மாணவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் பணிகளை வழங்கி வருகிறது.
குறைந்த நாட்கள்:
தவிர, ஐஐடி., என்.ஐ.டி., மாணவர்களுக்கு இதை விட பலமடங்கு சம்பளம் வழங்கி தேர்வு செய்து பணிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு, தனது தேர்வு முறையை டி.சி.எஸ்., நிறுவனம் புதிதாக மாற்றியுள்ளது. அதன் படி., தேசிய தகுதித்தேர்வு (என்.சி.டி.,) முறையை அமல்படுத்தி, மூன்று முதல் நான்கு வாரங்களில் பணியிடங்களுக்கான விதிகளை முடித்துவிட முடியும்.

இரண்டு மடங்கு சம்பளம்:
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐடி நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேரும் இந்திய இன்ஜினியர்களுக்கு ஆரம்பத்தில் ஆண்டுக்கு ரூ. 3.5 லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் டிஜிட்டல் தொழிநுட்பம் திறமை கொண்ட சுமார் 1000 பேருக்கு இரண்டு மடங்கு, ரூ. 6.5 லட்சம் சம்பளம் வழங்கி டி.சி.எஸ்., நிறுவனம் பணி வழங்கியுள்ளது.

புது தேர்வு முறை:
இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக புது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இருந்து தேர்வு வைத்து இந்த பணியிடங்களை டி.சி.எஸ்., நிறுவனம் நிரப்பியுள்ளது. தேசிய தகுதித்தேர்வு (என்.சி.டி.,) தேர்வாகும் மாணவர்கள் அடுத்த நிலை தேர்வுக்கு செல்ல முடியும். பின் அதில் மாணவர்களின் கோடிங் தகுதிகளை தேர்வு மூலம் ஆய்வு செய்து, அடுத்தகட்ட தேர்வுக்கு செல்வார்கள்.

இதனால், நுணுக்கமான திறமை கொண்ட மாணவர்கள் இறுதிகட்டத்துக்கு சென்று பணியில் சேர்வார்கள். இதன் மூலம், கம்பெனிக்கு புதிதாக பணிக்கு சேர்பவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நேரம் மிச்சமாகும் என அந்நிறுவன எச்.ஆர்., தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்