ஆப்நகரம்

40,000 பேருக்கு வேலை கொடுக்கும் டிசிஎஸ்!

இந்த ஆண்டில் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Jul 2020, 3:31 pm
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வைசஸ் (டிசிஎஸ்) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சென்ற ஆண்டில் மொத்தம் 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருந்தது. வளாக நேர்காணல்கள் வாயிலாக புதிதாகப் பட்டம் பெற்ற 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திருந்தது. அதேபோலவே இந்த ஆண்டும் புதிதாக 40,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Samayam Tamil tcs


இதுகுறித்து டிசிஎஸ் சர்வதேச மனிதவள மேலாண்மைப் பிரிவுத் தலைவரான மிலிண்ட் லக்காட் பேசுகையில், “அடிப்படை நிலையிலிருந்து பணியாளர்களை எடுக்கும் எங்களது நடவடிக்கை தொடரும். இந்தியாவில் மட்டும் 40,000 பேருக்கு வேலை வழங்கப்படும். இந்த எண்ணிக்கை 45,000 வரை உயரலாம். இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொழில் நடவடிக்கைகள் சூடுபிடித்த தொடங்கியுள்ளதால் பணியமர்த்தலில் கவனம் செலுத்துகிறோம். அமெரிக்காவில் மட்டும் இந்த நிதியாண்டில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். அங்கு விசா தடை இருப்பதால் உள்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக வழங்கப்படும்” என்று கூறினார்.

தங்கம் விலை: இன்னைக்கு என்ன ரேட்டு?

டிசிஎஸ் நிறுவனம் பிசினஸ் ஸ்கூல்ஸ் மூலமாக புதிய நபர்களைத் தனது நிறுவனத்தில் பணியமர்த்துகிறது. டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில் ஹெ1பி விசா மற்றும் எல்1 விசாக்களுக்குத் தடை விதித்தது சரியான முடிவு இல்லை எனவும், இதனால் இந்தியாவிலிருந்து ஐடி பணியாளர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவது பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் மிலிண்ட் லக்காட் கூறியுள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தில் பணியமர்த்தப்படவுள்ள 40,000 பேரில் பிரெஷர்கள் ஜூலை மாதத்தின் மத்தியில் இணைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 8,000 முதல் 11,000 பேர் ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் மூலமாகப் பகுதி பகுதியாகப் பணியமர்த்தப்படவுள்ளனர்.

அனுபவமிக்க 100 புரபஷெனல்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவிருப்பதாகவும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்