ஆப்நகரம்

டிடிஎஸ் வரிப் பிடித்தம்: மத்திய அரசின் அறிவிப்பு என்ன?

டிடிஎஸ் பிடித்தத்துக்கான வரி விகிதம் 25 சதவிகிதம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 May 2020, 7:41 pm
பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும் போது, கொரோனாவால் முடங்கியுள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புத் திட்டத்தை அறிவித்தார். இதுகுறித்த விவரங்களை பிரதமர் மோடி வெளியிடாத நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்திட்டம் குறித்து விளக்கினார். சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தும் வகையிலும், நாட்டு மக்களுக்கு நிதி சார்ந்த பயன்களை வழங்குவதாகவும் அந்த அறிவிப்பு இருந்தது.
Samayam Tamil tds


இதில் முக்கிய அறிவிப்பாக, டிடிஎஸ் (TDS - Tax Deduction at Source) மற்றும் டிசிஎஸ் (TCS - Tax Collection at Source) வரிப் பிடித்தங்கள் தற்போது இருக்கும் அளவில் இருந்து 25 சதவிகிதம் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இந்த வரி விகிதக் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும், நாளை முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையில் டிடிஎஸ் வரி விதிப்பு குறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவங்களெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா? ப.சிதம்பரம் காட்டம்!

இதுதவிர வருமான வரி தாக்கல் செய்வதிலும் சில சலுகை அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதாவது, 2019- 2020ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேதி ஜூலை 31 மற்றும் அக்டோபர் 31 எனும் தேதியிலிருந்து 2020 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோருக்கு என்ன பயன்? நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

ஊரடங்கு முதன்முதலில் அமல்படுத்தப்பட்ட போது, மார்ச் மாத இறுதியில் ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகையை நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது சிறப்புப் பொருளாதாரச் சலுகையானது, தொழில் துறையினர் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்