ஆப்நகரம்

ரூ. 16,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க டிசிஎஸ் முடிவு!!

இந்தியாவின் நம்பர் ஒன் ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி) ரூ. 16,000 கோடி மதிப்பிலான பங்குகளை தனது பங்குதாரர்களிடம் இருந்து திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 15 Jun 2018, 5:35 pm
இந்தியாவின் நம்பர் ஒன் ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி) ரூ. 16,000 கோடி மதிப்பிலான பங்குகளை தனது பங்குதாரர்களிடம் இருந்து திரும்ப வாங்க முடிவு செய்துள்ளது.
Samayam Tamil பங்குகளை திரும்ப வாங்க டிசிஎஸ் முடிவு!!
பங்குகளை திரும்ப வாங்க டிசிஎஸ் முடிவு!!


இந்தியாவின் நம்பர் ஒன் ஐடி நிறுவனம் டிசிஎஸ். இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ஐடி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தனது பங்குதாரர்களிடம் இருந்து ரூ. 16,000 கோடி மதிப்பிலான 1.99 சதவீதம் பங்குகளை, பங்கு ஒன்று ரூ. 2,100 மதிப்பீட்டில் திரும்ப வாங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இந்தப் பணத்தை திரும்ப தனது தொழில் முதலீடாக அல்லது பங்கு முதலீடாக வாங்கும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்துள்ளது.

இன்றுதான் இதற்கான முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இன்று டாடா நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ. 1,800 ஆக இருந்தது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் டாடா நிறுவனம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. இந்த முடிவை டாடா நிறுவனத்தின் இயக்குநர்கள் எடுத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 7,61,90,476 பங்குகளை திரும்ப வாங்குவதற்கு டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதேபோன்று கடந்தாண்டும் டாடா நிறுவனம் பங்குகளை திரும்பப் பெற்று இருந்தது. இன்று வர்த்தகத்தின் ஊடே ஒரு பங்கின் மதிப்பு ரூ. 1,849 வரை உயர்ந்து, வர்த்தக இறுதியில் ரூ. 1,845ஆக முடிந்தது. முந்தைய நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் இது 2.94 சதவீதம் அதிகமாகும். நேற்று ஒரு பங்கின் மதிப்பு ரூ. 1,792.25 ஆக இருந்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்