ஆப்நகரம்

பீதியில் தனியார் ஊழியர்கள்.. தொடங்கியது பணிநீக்க பூகம்பம்.. ஆப்பிளுக்கே இந்த நிலையா!

ஆப்பிள் நிறுவனம் சுமார் 100 ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 16 Aug 2022, 1:02 pm
சர்வதேச பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சத்தால் சிறு நிறுவனங்கள் முதல் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் தங்கள் ஊழியர்களை நீக்கி வருகின்றனர். ஏற்கெனவே மைக்ரோசாஃப்ட், டெஸ்லா, நெஃபிக்ஸ், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களை நீக்கியுள்ளன.
Samayam Tamil apple


இந்நிலையில், தற்போது ஆப்பிள் (Apple) நிறுவனமும் சுமார் 100 ஒப்பந்த ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் உலகிலேயே அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாகும். அப்படிப்பட்ட ஆப்பிள் நிறுவனமே தற்போது ஊழியர்களை நீக்கியுள்ளது அதிர்ச்சி தகவலாக வெளியாகியுள்ளது.

செலவுகளை குறைப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் சுமார் 100 ஒப்பந்த ஊழியர்களை வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோக, ஏற்கெனவே காலியாக இருக்கும் பணியிடங்களையும் குறைப்பதற்கு ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் இனி ஆப்பிள் நிறுவனம் செலவு செய்வதில் கவனமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். எனினும், பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என அவர் கூறினார்.

இந்திய பொருளாதாரம் வளர இதை செய்தால் போதும்.. ரிசர்வ் பேங்க் முன்னாள் ஆளுநர் சொல்வதை கேளுங்க!
சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்ற அச்சமே பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை வெளியேற்றுவதற்கு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஏற்கெனவே கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த காலாண்டில் வருமானம் சரியில்லை என்றால் பங்கு விலை சரிந்துவிடும். எனவே, ஊழியர்கள் செயல்திறனை அதிகரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் வேலையை விட்டு வெளியேற வேண்டும் என ஊழியர்களுக்கு கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல ஃபேஸ்புக் நிறுவனமும் ஊழியர்களை எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்