ஆப்நகரம்

Layoffக்கு நோ நோ.. ஊழியர்களை குஷியில் ஆழ்த்திய TCS நிறுவனம்!

டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதற்கு எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 20 Feb 2023, 11:45 am
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) உலகளவிலும் முன்னணி ஐடி சேவைகள் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.
Samayam Tamil tcs
tcs


உலகம் முழுவதும் பல்வேறு பெரிய பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்து வருகின்றன. குறிப்பாக சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களே பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை அண்மையில் மொத்தமாக ஆட்குறைப்பு செய்துள்ளன.

மைக்ரோசாப்ட், கூகுள், ஐபிஎம், மெட்டா, ட்விட்டர், அமேசான் உள்பட இன்னும் பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யப்படக்கூடும் என டெக் ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவியது.

இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களை ஆட்குறைப்பு (Layoff) செய்ய திட்டமில்லை எனவும், ஒரு ஊழியரை பணியமர்த்திவிட்டால் அவரை நீண்டகால அடிப்படியில் திறமையை வளர்ப்பதிலேயே டிசிஎஸ் நம்புவதாகவும் டிசிஎஸ் நிறுவனத்தின் HR துறை தலைவர் மிலிண்ட் லக்காட் தெரிவித்துள்ளார்.

இது டிசிஎஸ் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளியாகியுள்ளது. அண்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் ஆட்குறைப்பால் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் டிசிஎஸ் திட்டமிட்டுள்ளதாம்.

உலகளவில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய மிலிண்ட் லக்காட், “நாங்கள் ஆட்குறைப்பு செய்வதில்லை. நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் திறமையை வளர்த்தெடுப்பதை நாங்கள் நம்புகிறோம். ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “நிறுவனங்கள் தேவைக்கு மிகுதியாக ஊழியர்களை பணியமர்த்துவதால், பின்னர் ஆட்குறைப்பு செய்கின்றனர். ஒரு ஊழியர் பணியில் இணைந்துவிட்டார் அவரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது நிறுவனத்தின் பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்