ஆப்நகரம்

இல்லத்தரசிகளுக்கு டென்ஷன்.. எண்ணெய் விலையில் பூகம்பம்!

சமையல் எண்ணெய் விலை விரைவில் உயரவிருப்பதால் இல்லத்தரசிகள் டென்ஷன்.

Samayam Tamil 27 Feb 2022, 12:37 pm

உக்ரைன் - ரஷ்யா போரால் பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த வரிசையில் அடுத்து சமையல் எண்ணெய் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil oil


இன்றுடன் நான்காவது நாளாக உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன. இதன் விளைவாக, பல்வேறு துறைமுகங்களில் சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கியுள்ளன.

இந்த சரக்குகளின் விலை சுமார் 570 மில்லியன் டாலர். உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரவேண்டிய சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் தேங்கி நிற்பதால் மற்ற நாடுகளில் இருந்து சோயா எண்ணெய், பாமாயில் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இந்தியா திட்டமிடுகிறது.
தள்ளுபடி விலையில் தங்கம் வாங்க அதிரடி வாய்ப்பு!

அடுத்த சில வாரங்களுக்குள் சூரியகாந்தி எண்ணெய் சரக்குகள் வந்துசேராவிட்டால் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் என தொழில்துறையினர் கூறுகின்றனர். பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு கருங்கடல் பகுதியில் இருந்து 510,000 டன் சூரியகாந்தி எண்ணெய் இந்தியாவுக்கு வர வேண்டும்.

இதில் தற்போது வரை 130,000 டன் இந்தியாவுக்கு வந்துசேர்ந்துவிட்டன. மீத சரக்குகள் பல்வேறு துறைமுகங்களில் தேங்கியுள்ளன. இதனால் மலேசியாவில் இருந்து பாமாயில், அமெரிக்காவில் இருந்து சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஆனால், சோயா எண்ணெய், பாமாயில் ஆகியவையும் மிக அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றன. எனவே, விரைவில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் அவதிப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்