ஆப்நகரம்

’வெட்டாத கிணறுக்கு ரசீது’: யெஸ் வங்கிக்கு என்னாச்சு?

தானேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு கடன் வாங்கியதாகக் கூறி போலியான நோட்டீஸை யெஸ் வங்கி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Samayam Tamil 18 Mar 2020, 3:31 pm
தனியார் துறை வங்கியான யெஸ் வங்கி அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் அரவணைப்பில் மெல்ல மெல்ல வாராக் கடன் பிரச்சினையிலிருந்து மீளத் தொடங்கியுள்ளது. யெஸ் வங்கியில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஆறு வங்கிகள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இன்று முதல் யெஸ் வங்கியின் அனைத்து வங்கிக் கிளைகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் டெபாசிட் பணம் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil யெஸ் வங்கிக்கு என்னாச்சு வெட்டாத கிணறுக்கு ரசீது அலறும் தொழிலதிபர்


யெஸ் வங்கியில் அதிகளவில் கடன் வாங்கிய பெரு நிறுவனங்களும் தொழிலதிபர்களும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியதே இவ்வங்கியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகும். இதனால் கடன் மீட்பு நடவடிக்கைகளில் வங்கி தீவிரமாக இறங்கியுள்ளது. சென்ற ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் தானேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இவ்வங்கி அனுப்பிய கடன் மீட்பு நோட்டீஸ் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பும் உலகப் பொருளாதார வீழ்ச்சியும்!!

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கோபாட் பகுதியில் வசித்து வருபவர் சச்சின் தலவ்தேகர். இவர், பேட்டரி, யூபிஸ் தயாரிக்கும் குளொபல் டெக்னோ இந்தியா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு சென்ற 2019 செப்டம்பர் மாதம் யெஸ் வங்கியிடமிருந்து நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில் அவர் வாங்கிய கடனை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

வீட்டிலிருந்தே வேலை... எதிர்காலமும் சிக்கல்களும்!

ஏனெனில் அவருக்கும் யெஸ் வங்கிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் கூறுகிறார். சொல்லப்போனால் அவர் அதற்கு முன்னர் யெஸ் வங்கியின் வாசல் படியைக் கூட மிதித்ததில்லையாம். இந்த நோட்டீஸ் வந்தவுடன் அருகில் இருந்த யெஸ் வங்கிக்குச் சென்று விசாரித்துள்ளார். அங்கு அவருக்கு உரிய விளக்கம் கிடைக்கவில்லை. டெல்லி தலைமை அலுவலகத்தில் கூறி பதில் தருகிறோம் என்று அந்த வங்கிக் கிளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு அவருக்கு உரிய தீர்வு கிடைக்காததால் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்துள்ளார்.

யெஸ் வங்கி: ஏடிஎம்ல பணம் இல்லையா... யாரு சொன்னது?

யெஸ் வங்கியில் அவர் ரூ.152 கோடி கடன் வாங்கியதாக அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் தனிநபர் கடன், வீட்டுக் கடன் என மொத்தமே ரூ.25 லட்சத்துக்குள் மட்டுமே கடன் வாங்கியுள்ளார். அதுவும் அவர் வேறு வங்கிகளில் வாங்கிய கடனாகும். நிலைமை இப்படி இருக்க சம்பந்தமே இல்லாமல் இவருக்கு ஏன் யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது என்று அவருக்குப் பிடிபடவே இல்லை. அவர் புகார் அளித்த காவல் நிலையத்தின் அதிகாரிகள் கூறும்போது, யெஸ் வங்கி இவருக்குத் தவறுதலாக நோட்டீஸை அனுப்பியிருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆனால் யெஸ் வங்கி தரப்பிலிருந்து இதுகுறித்து முறையான விளக்கம் எதுவும் கொடுக்கப்படவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்