ஆப்நகரம்

சம்பள உயர்வுக்கு பின்.. மொத்தமாக ராஜினாமா செய்யும் இந்திய ஊழியர்கள்!

இந்திய ஊழியர்களில் 40% பேர் சம்பள உயர்வுக்கு பின் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக சர்வே ரிப்போர்ட் கூறுகிறது.

Samayam Tamil 20 Jun 2022, 2:56 pm
இந்தியாவில் சம்பள உயர்வு கிடைத்தபின் வேலையை ராஜினாமா செய்வதற்கு 40% ஊழியர்கள் முடிவு செய்துள்ளதாக சர்வே ரிப்போர்ட் கூறுகிறது.
Samayam Tamil employees


அமெரிக்காவில் அண்மைக்காலமாக ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜினாமா செய்து வந்தனர். இதை ‘தி கிரேட் ரெசிக்னேஷன்’ (The Great Resignation) என அழைத்தனர். இதில் ஜூனியர்கள் முதல் சீனியர்கள் வரை ஏராளமான அமெரிக்க ஊழியர்கள் ராஜினாமா செய்தனர்.

ஊழியர்கள் ராஜினாமா செய்வதை தடுப்பதற்காகவும், திறமையான ஊழியர்களை தக்கவைப்பதற்காகவும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கின. அதிக சம்பள உயர்வு, போனஸ், சிறப்பு விடுமுறை என சூப்பரான சலுகைகளை அமெரிக்க நிறுவனங்கள் அறிவித்தன.

அரசு ஊழியர்கள் இதெல்லாம் பயன்படுத்த தடை.. மத்திய அரசு உத்தரவு!
இந்நிலையில், இந்தியாவிலும் அமெரிக்காவை போல ஊழியர்கள் கொத்து கொத்தாக ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. சம்பள உயர்வு கிடைத்த பின் இந்தியாவில் 10 ஊழியர்களுக்கு 4 பேர், அதாவது 40% ஊழியர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக Naman HR என்ற கன்சல்டன்சி நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

துறைகளின் அடிப்படையில் சேவைத் துறையில் 37%, உற்பத்தி துறையில் 31%, ஐடி துறையில் 27% ஊழியர்கள் சம்பள உயர்வுக்கு பின் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக சர்வே ரிப்போர்ட் கூறுகிறது. பாலின அடிப்படையில் 60% ஆண்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

ஊழியர்கள் ராஜினாமா செய்ய என்ன காரணம்? சம்பளம் மெதுவாக உயருவதே ராஜினாமா செய்வதற்கான முக்கிய காரணம் என்கின்றனர் ஊழியர்கள். இதற்கு அடுத்தபடியாக, மேனேஜர்களால் ஏற்படும் அசவுகரியத்தால் ராஜினாமா செய்வதாக சர்வே ரிப்போர்ட் கூறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்