ஆப்நகரம்

தமிழ்நாட்டில் மாபெரும் காலணி தொழிற்சாலை.. 20 ஆயிரம் பேருக்கு வேலை!

சுமார் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் காலணி தொழிற்சாலைக்கான நில ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியுள்ளது.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 4 Apr 2023, 11:25 am
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து நேற்று ரூ. 1000 கோடியில் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கு நில ஒதுக்கீட்டு ஆணை தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் வழங்கப்பட்டது.
Samayam Tamil footwear factory


தமிழ்நாடு பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருவதுடன் முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியின் காரணமாக தமிழ்நாடு மேலும் மேன்மை பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஏப்ரல் 7ஆம் தேதி தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் காலணி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டதை தொடர்ந்து நேற்று (ஏப்ரல் 4) தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் தைவான் நாட்டைச் சார்ந்த ஹோங் ஃபூ தொழில் குழுமத்தின் நிறுவனத் தலைவர் டி. ஒய். சங்கிடம் வழங்கப்பட்டது.

இதற்காக 125 ஏக்கர் நிலம் சிறப்பு பொருளாதார மண்டலத்திலும், 5 ஏக்கர் நிலம் உள்நாட்டு பயன்பாட்டிற்காகவும் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் நிலை 1-ல் கொள்கை அளவில் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இத்தொழிற்சாலை அமைவதன் மூலம் சுமார் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு (17,350 நேரடியாகவும் மற்றும் 2,650 மறைமுகமாகவும்) கிடைக்கும். இந்நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யவிருக்கிறது.

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட எஸ்பிஐ.. மீண்டும் சேவைகள் தொடங்கின!
இந்நிகழ்ச்சியின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ச. கிருஷ்ணன், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ. சுந்தரவல்லி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆஷா அஜித், சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்