ஆப்நகரம்

அரிசி ஏற்றுமதிக்கு தடையா? மத்திய அரசின் முடிவு என்ன?

இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 May 2022, 12:55 pm
விவசாயத் தொழில் முக்கியமாக உள்ள இந்தியாவில் அதிகளவு அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அரிசி உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானதாக இருப்பதோடு, அதிகளவில் இருப்பு வைக்கப்படுகிறது. எனவே அரிசி ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது.
Samayam Tamil rice export


இந்நிலையில், இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாகத் தகவல் பரவியது. ஆனால், அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டிய தேவை இப்போது இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு, அளவுக்கு அதிகமான அரிசி இருப்பில் இருப்பதாகவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படாது எனவும் அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அரிசி விலையும் சந்தையில் தற்போது கட்டுக்குள் உள்ளது.

Export growth India: ஏற்றம் காணும் ஏற்றுமதி.. வளர்ச்சிப் பாதையில் இந்தியா!
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ’மணி கண்ட்ரோல்’ ஊடகத்திடம் பேசுகையில், அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதற்கான எண்ணம் தற்போது அரசிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். அரிசி ஏற்றுமதியைப் பொறுத்தவரையில், 2021-22 நிதியாண்டில் இந்தியா மொத்தம் 21.2 மில்லியன் டன் அளவிலான அரிசியை ஏற்றுமதி செய்தது. அதற்கு முந்தைய நிதியாண்டில் ஏற்றுமதி அளவு 17.8 மில்லியன் டன்னாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்