தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள 2.5 லட்சம் ரூபாய் என்ற நிலையிலிருந்து உயர்த்தப்பட இருக்கிறது என பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்படுகிறது. பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் சாமானியர்களிடமும் பல துறைகளைச் சேர்ந்தவர்களிடமும் அதிகமாக உள்ளது.
இது குறித்து நிறுவனங்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. நாடு முழுதும் உள்ள 226 நிறுவனங்கள் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். இதில் 74 சதவீதம் பேர் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போது இருக்கும் வரம்பான ரூ.2.5 லட்சத்திலிருந்து உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளனர்.
சொத்து வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என 10 சதவீதம் பேர் சொல்கிறார்கள். பரம்பரை சொத்துக்கான வரி மீண்டும் கொண்டு வரப்படலாம் என 13 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய்க்கு மேல் கொண்டவர்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டுக்கடன் சார்ந்த வட்டிக்கான வரி விலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயில் இருந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று 65 சதவீதம் பேர் கருதுகின்றனர். இது வீட்டுக்கடன் சார்ந்த வட்டிக்கான வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி (Section 80C) மூலம் அளிக்கப்படும் வரி விலக்குக்கான வரம்பையும் 3 லட்சம் ரூபாய் உயர்த்த வேண்டும் எனக் கருதப்படுகிறது.
கடந்த பிப்வரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தனிநபரின் வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில் முழுமையான வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது பொருந்தாது எனவும் கூறப்பட்டது.
ஆனால், வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பிரதான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மேலும் 2.5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், ஆண்டுக்கு 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களும் 20% வரிக்கு பதிலாக 5% வரியைச் செலுத்தினால்போதும் என்ற நிலை ஏற்படும்.
நிறுவனங்களைப் பொறுத்தவரை மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரியை (Minimum Alternate Tax) ரத்து செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நுகர்வை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனக் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 5ஆம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகள் சாமானியர்களிடமும் பல துறைகளைச் சேர்ந்தவர்களிடமும் அதிகமாக உள்ளது.
இது குறித்து நிறுவனங்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. நாடு முழுதும் உள்ள 226 நிறுவனங்கள் இந்தக் கருத்துக்கணிப்பில் பங்கேற்றனர். இதில் 74 சதவீதம் பேர் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போது இருக்கும் வரம்பான ரூ.2.5 லட்சத்திலிருந்து உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளனர்.
சொத்து வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என 10 சதவீதம் பேர் சொல்கிறார்கள். பரம்பரை சொத்துக்கான வரி மீண்டும் கொண்டு வரப்படலாம் என 13 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
ஆண்டு வருமானம் 10 கோடி ரூபாய்க்கு மேல் கொண்டவர்களுக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என 58 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். வீட்டுக்கடன் சார்ந்த வட்டிக்கான வரி விலக்கு வரம்பை 2 லட்சம் ரூபாயில் இருந்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று 65 சதவீதம் பேர் கருதுகின்றனர். இது வீட்டுக்கடன் சார்ந்த வட்டிக்கான வரி விலக்கு வரம்பு 3 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி (Section 80C) மூலம் அளிக்கப்படும் வரி விலக்குக்கான வரம்பையும் 3 லட்சம் ரூபாய் உயர்த்த வேண்டும் எனக் கருதப்படுகிறது.
கடந்த பிப்வரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் தனிநபரின் வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இருக்கும் பட்சத்தில் முழுமையான வரி விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இது பொருந்தாது எனவும் கூறப்பட்டது.
ஆனால், வரும் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பிரதான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு மேலும் 2.5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டால், ஆண்டுக்கு 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களும் 20% வரிக்கு பதிலாக 5% வரியைச் செலுத்தினால்போதும் என்ற நிலை ஏற்படும்.
நிறுவனங்களைப் பொறுத்தவரை மேட் எனப்படும் குறைந்தபட்ச மாற்று வரியை (Minimum Alternate Tax) ரத்து செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நுகர்வை ஊக்குவித்து பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் எனக் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.