ஆப்நகரம்

சிப் இல்லாத டெபிட் & கிரெடிட் கார்டுகள் இனி செல்லாது- ஜனவரி முதல் புதிய நடைமுறை

காந்தக்கோடுகளுக்கு பதில், சிப் கொண்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே இனி அனுமதி.

Samayam Tamil 26 Nov 2018, 8:42 pm
வரும் ஜனவரி 1 முதல், சிறிய மின்னணு சிப் பொருத்தப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற ரிசர்வ் வங்கியின் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
Samayam Tamil debit credit card
டெபிட் & கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் புதிய விதிமுறை


கடந்த சில ஆண்டுகளில் டெபிட், கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் மோசடி குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, கடந்த செப்டம்பர் 2015ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயனாளிகளுக்கு வழங்குபடி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.

தற்போது பயன்பாட்டில் உள்ள கார்டுகளின் பின்புறத்தில் மேக்னடிக் ஸ்டிரைப் என்கிற காந்தக்கோடுகள் உள்ளன. அதற்கு பதிலாக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த சிறிய மின்னணு சிப் பொருத்தப்பட்ட கார்டுகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

ரிசர்வ் வங்கியில் இந்த புதிய விதிமுறைகளை எந்த வங்கிகளும் பின்பற்றவில்லை. இந்நிலையில், வாடிக்கையாளர்களுக்கு சிப் வைக்கப்பட்ட கார்டு வழங்குவதற்கான காலக்கெடு வருகிற டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர், பழைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் செல்லாமல் போகக் கூடிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்