ஆப்நகரம்

வயதான காலத்தில் நோ டென்சன்.. கைநிறைய பணம் கிடைக்கும்!

உட்கார்ந்தே சாப்பிடலாம்!

Samayam Tamil 20 Apr 2022, 8:27 am
மத்திய அரசின் இந்தத் திட்டங்கள் ஓய்வுக் காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் வாழ்வதற்கு உதவும். இதில் ஏதேனும் ஒரு திட்டத்தில் நீங்கள் சேரலாம்..
Samayam Tamil these govt schemes will help senior citizens in retirement time
வயதான காலத்தில் நோ டென்சன்.. கைநிறைய பணம் கிடைக்கும்!


ஓய்வுக் காலம்:

இந்தியாவின் மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வுக்குப் பின் ஏற்படும் செலவுகளைப் பற்றி எப்போதுமே கவலைப்படுகிறார்கள். உண்மையில், ஓய்வுக்குப் பிறகு பணப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில் உங்களுடைய பாதுகாப்பான எதிர்காலத்திற்காக சரியான திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் முக்கியம். மூத்த குடிமக்கள் தங்களின் பாதுகாப்பான எதிர்காலத்திற்காகவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இப்போதிருந்தே சரியான சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வது அவசியம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:

தபால் நிலையங்கள் அல்லது பொதுத்துறை வங்கிகள் மூலம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் (SCSS) முதலீடு செய்யலாம். இதில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்து உங்கள் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். நீங்கள் விரும்பினால் அதை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். தற்போதைய நிலையில் இத்திட்டத்தில் ஆண்டுக்கு 7.40 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் பத்திரம்:

உங்களுடைய முதுமைக் காலத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கியின் ஃபுளோட்டிங் விகிதப் பத்திரங்களில் 15 லட்சம் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்யலாம். இந்த பத்திரத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. தற்போது ஆண்டுக்கு 7.15 சதவீத வட்டி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.

வய வந்தனா யோஜனா:

மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கான சிறப்புத் திட்டம். 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இதில் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் அதிக வயது வரம்பு இல்லை. இதில் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதில், ஆண்டு ஓய்வூதியத்திற்காக குறைந்தபட்சம் ரூ.1,44,578 முதலீடு செய்யலாம். அதிகபட்ச கொள்முதல் விலை ரூ.14,45,783 ஆகும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்:

தபால் அலுவலக திட்டங்கள் எப்போதும் பாதுகாப்பானதாகவும் உத்தரவாதமான பலனை வழங்குவதாகவும் உள்ளன. அதில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டம் மிக முக்கியமான ஒன்று இதில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தைப் பெறலாம். மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கையும் நீங்கள் பெறலாம். இந்த திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுக்கு 6.8 சதவீத வட்டி கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்